Tiruppur

News September 13, 2024

வினாத்தாள் மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

image

தமிழக முழுவதும் நாளைய தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுதும் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான வினாத்தாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

News September 13, 2024

ஒரே இடத்தில் சங்கமித்த தொழில் கண்காட்சி

image

திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி (ம) மறுசுழற்சி தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ‘யார்னெக்ஸ்’, ‘டெக்ஸ் இந்தியா’ மற்றும் ‘டைகெம்’ கண்காட்சிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், ‘பிராண்ட்’ துணை கமிட்டி தலைவர் ஆனந்த்,’நிட்மா’ தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

News September 13, 2024

மகாவிஷ்ணுவிடம் 5.30 மணி நேரம் விசாரணை

image

சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர், குளத்துபாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 5.30 மணி நேரம் மேற்கொண்ட விசாரணையில் லேப்டாப், ஹார்டு டிஸ்க் என முக்கிய ஆவணங்கள் சிக்கியது. விசாரணையை முடித்த போலீசர், மகாவிஷ்ணுவை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

News September 12, 2024

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிப்பு

image

தட்கல் திட்டத்தில் 3 ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டுள்ள 30ஆயிரம் விவசாயிகளுக்கும், மற்ற திட்டங்களிலும் விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  அனைத்து தலைமை பொறியாளர் அலுவலகங்களிலும் வருகிற அக்டோபர் 1 அன்று மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் இயக்கம் அக்டோபர் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

News September 12, 2024

திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு

image

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை தொடர்பாக 3 நாட்கள் மகாவிஷ்ணு காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளை அலுவலகம் உள்ள அவிநாசி குளத்துப்பாளையத்திற்கு போலீசார் விசாரணைக்காக இன்று மகாவிஷ்ணுவை அழைத்து வந்தனர்.

News September 12, 2024

தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். அதன்படி, தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவர்கள் வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News September 11, 2024

திருப்பூரில் தாய், பிள்ளைகள் மீது புகார்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைவிற்கு நாள் கூட்டத்தில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இவர்கள் அனைவரும் தன்னை கவனிக்காமல் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

News September 11, 2024

கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் (ம) தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன், கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவி வழங்கினர்.

News September 11, 2024

3744 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்தனர். இதில் பரிசீலிக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு பகுதியில் திருக்குமரன் நகரில் 1248, ஜெயா நகரில் 256, பாரதிநகரில் 288, திருமுருகன் பூண்டியில் 224, அவிநாசி சோலை நகரில் 448, வீரபாண்டியில் 1280 என மொத்தம் 3744 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 11, 2024

திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 நாட்களாக வழிபாடு நடத்தி வந்த நிலையில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் எம்.எஸ்.நகர் பகுதியில் வரும்போது இந்து முன்னணியின் இருவேறு பகுதி இளைஞர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!