India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான விடுதிகளை நாள் முழுவதும் அடைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 30.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை (ஜன.31) மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இதனால் தலைமை நீரேற்று நிலையத்தில், 4வது குடிநீர் திட்டத்தில் நீரேற்றும் பணி முற்றிலும் தடைபடும். எனவே திருப்பூர் மாநகராட்சியில் வரும் பிப்1ம் தேதி மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படாது. குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தவும், திருப்பூர் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <

தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் இன்று ஆம்னி காரும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவிநாசி சின்னேரிபாளையத்தைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளர் சுரேஷ் (27), கோவையிலிருந்து திரும்பும்போது தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

காங்கயத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 5 பேரைப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசன் ஹபீப் ( 22), முகமதுகம்ரூல் காசி (57). ரபீக் காசி (46), அப்சர் இஸ்லாம் (47), சோனி ஷேக் (42) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படாத நிலையில் இன்று 30ஆம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.