Tiruppur

News November 13, 2024

திருப்பூர்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகர பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பாரா என்று பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். சற்று நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2024

திருப்பூர் அருகே அரசு பேருந்து மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்லடம் வட்டத்திலுள்ள கள்ளிபாளையம் அருகில் சாலையில் மோட்டர் பைக்கில் சென்ற போது கோவையிலிருந்து பல்லடம் வழியாக குமுளி வரை சென்ற பெரியகுளம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து மின்ஊழியர் வசந்தபாபு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News November 12, 2024

திருப்பூர் அருகே  தீ பிடித்து எரிந்த கார்

image

திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை சேர்ந்தவர் துளசிமணி, இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கோவை சென்று விட்டு, அவிநாசி சாலை வழியாக காரணம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். சூலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் இன்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதுடன், தீப்பிடித்து எரிய தொடங்கியது. இஞ்சினில் பற்றிய தீ கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

News November 12, 2024

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று செவ்வாய் கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தெரிவிக்கலாம்

News November 12, 2024

ட்ரம்ப் வெற்றி: திருப்பூரில் எதிரொலிக்குமா?

image

ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவு தொடர்வதால், புதிய வர்த்தக வாய்ப்புகள் பெருகி, திருப்பூர் ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரிக்கவும் தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், பெரிய மாற்றம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வரும் காலங்களில் உற்பத்தி உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

News November 12, 2024

உடுமலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பூதப்பாண்டி வழக்கறிஞர் கிறிஸ்தவ ஜோதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை ஏற்றக்கோரி திருப்பூர் பாரஸ்ட் ஸ்டேஷன் அட்வகேட் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக உடுமலையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

News November 12, 2024

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற அவகாசம்

image

திருப்பூர் மாவட்ட தனித்தேர்வு மையங்களில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான பருவங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்த தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக வினியோகிக்கப்பட்டது.

News November 12, 2024

திருப்பூர்: பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு மது விற்பனை

image

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வட்டம் டாஸ்மாக் கடையில் (எண் 3990) பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாட்டிலில் உள்ள விலைக்கு மதுபானத்தை கேட்டனர். கடையின் சேல்ஸ்மேன் பொதுமக்களை தரை குறைவாக பேசி மது பாட்டிலை கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. மதுவிலக்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News November 12, 2024

அழைப்பு விடுத்த திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு தென்னை காப்பீட்டு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்த ஆண்டு தென்னை மரம் காப்பீட்டை எவ்வாறு செயல்படுத்தி வருகிறது? இத்திட்டத்தின் கீழ் வெள்ளம், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்றவற்றிற்கு உரிய காப்பீடு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

News November 11, 2024

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கத்தில் (அறை எண்.20) நடைபெறவுள்ளது. வேலை தேடுகிறவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!