Tiruppur

News February 25, 2026

திருப்பூர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

திருப்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

மூலனூர் அருகே உள்ள எலுகாம்வலசையை சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் பொன்னிவாடி ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றினார். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சண்முகத்தை கைது செய்தனர்.

News February 25, 2026

மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

image

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

News February 25, 2026

மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

image

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

News February 25, 2026

மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

image

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

News February 25, 2026

மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

image

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

News February 25, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.24) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 25, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.24) இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 25, 2026

திருப்பூரில் வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப். 27ம் தேதி காலை 10 மணிக்கு ‘வெள்ளாடு வளர்ப்பு’ குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், வெள்ளாடு வளர்ப்பு முறைகள், தீவன மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

News February 24, 2026

திருப்பூர்: கஞ்சா சாக்லேட் வைத்திருந்தவர் கைது

image

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த தரோகா (44) என்பதும், அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா சாக்லேட் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!