Tiruppur

News November 16, 2024

திருப்பூர்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை ➤திருப்பூரில்: கடன் தவணை பைனான்ஸ் நிறுவனம் அட்டூழியம் ➤எம்.பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் ➤தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ➤திருப்பூரில் அதிகாலை முதல் சாரல் மழை ➤சபரி மலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு ➤பல்லடத்தில் 6 வயது சிறுவன் கொலை ➤மின்கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம் ➤மாலையிட்டுக் கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.

News November 16, 2024

திருப்பூர் கடன் தவணை: பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

image

திருப்பூர், அவிநாசி அருகே வீட்டுக்கடன் தவணையை கடந்த 3 மாதமாக செலுத்தாததால் ஆத்திரமடைந்த தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டு சுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என பெயிண்டால் எழுதியுள்ளனர். திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் கடனை வசூலிக்க இது சரியான முறையல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

News November 16, 2024

எம்.பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கணியூர்,மடத்துக்குளம் ,சங்கரமநல்லூர்,குமரலிங்கம் ஆகிய பேரூராட்சிகளின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News November 16, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கி வைத்தார். ஆடை உற்பத்தி, ஜவுளி விற்பனை, நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்கள் பங்கேற்று நேர்முகத் தேர்வில் பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில் சுமார் 48 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையை பெற்றனர்.

News November 16, 2024

சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கார்த்திகை முதல் தேதி இன்று பிறந்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சென்னை-கொல்லம் சிறப்பு ரயில் வரும் 19ம் தேதிமுதல் 2025 ஜன.15ம் தேதி செவ்வாய் வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வழியாக மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கொல்லம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

பல்லடத்தில் 6 வயது சிறுவன் கொலை

image

பல்லடம் காரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த 3 ஆண்டுகளாக தனது 6 வயது மகனுடன் தங்கி பணிபுரிந்து வரும் ஒடிசாவை சேர்ந்த அனிதா நாயக், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த கணுதாஸ் சரியாக வேலை செய்யவில்லை என உரிமையாளரிடம் புகாரளித்தார். இதில் ஆத்திரமடைந்த கணுதாஸ் அப்பெண்ணை பழி வாங்குவதற்காக அவரது 6 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். போலீசார் அவரை கைதுசெய்தனர்.

News November 16, 2024

திருப்பூர் மக்களே இன்று, நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

image

திருப்பூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான கிறிஸ்துராஜா, வார விடுமுறை தினமான இன்றும், நாளையும் (நவ.16, 17) சிறப்பு முகாமை அமைத்து புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, இடமாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சிறப்பு முகாம் இம்மாதம் 23, 24ஆம் தேதிகளிலும் நடைபெறும்.

News November 16, 2024

திருப்பூரில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம்

image

திருப்பூர் தெற்கு மின் உபகோட்டம் முதலிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட வி.ஜி.பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகிர்மான பகுதிகளில் மின் கட்டண கணக்கீட்டு மாதம் சில நிர்வாக காரணங்களுக்காக இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்களுக்கு 11-ம் மாதம், 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை மாதங்களில் மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

News November 15, 2024

திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விபரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் குற்ற செயல்களை போலீசாருக்கு உடனே தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

News November 15, 2024

திருப்பூரில் சுயவிவரம் மாற்ற ஓர் அரிய வாய்ப்பு 

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது தேர்வு எழுத உள்ளோர், தேர்வு மைய விபரம், தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் தங்கள் இணைப்புடன் வழங்கிய சுய விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவரிடம் வழங்க வேண்டும். இன்று முதல் வரும், 22ஆம் தேதி வரை மாணவர் ஒப்புதலுடன் மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!