Tirupathur

News September 19, 2024

திருப்பத்தூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலி

image

திருப்பத்தூர் காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 40 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் மோதி அடிபட்டு மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.

News September 19, 2024

திருப்பத்தூரில் போட்டோகிராபி இலவச பயிற்சி

image

திருப்பத்தூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபிக் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பத்து நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும். இப்பயிற்சியானது அக் 7ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க IDBI புதுப்பேட்டை கிளையை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

News September 19, 2024

மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்த ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வட புதுப்பட்டு பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்வில் பங்கேற்று வந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அங்கு இருக்கும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடம் எடுத்தார். மேலும் மாணவர் ஒருவரை பலகையில் கணக்கு போட வைத்தார். இந்த நிகழ்வின் போது ஆட்சியர் மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்வின் போது ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

News September 18, 2024

நாட்றம்பள்ளி அருகே தொடக்கக் கல்வி அலுவலர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியைச் சேர்ந்த தொடக்கக் கல்வி அலுவலரான சித்ரா. இவரை தருமபுரியில் ரூ.12 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தர்மபுரி குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக இன்று கைது செய்தனர். உடன் இவருடைய கணவர் செல்வம் புத்துக்கோயில் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 18, 2024

திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் வாராந்திர புதன் தின குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்து விசாரணையில் திருப்தி அடையாத 7 புகார் தாரர்களின் மனுவை மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். மேலும், புதியதாக 57 புகார் மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

News September 18, 2024

திருப்பத்தூரில் வாக்கு சாவடிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்கு சாவடிகளை பிரித்தல் மற்றும் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பாக அரசியல் கட்சியினரின் கருத்து கேட்பு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறுகிறது.

News September 18, 2024

திருப்பத்தூர் மண்டல செயலாளர் விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு நிதி

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநாட்டிற்கு விசிக திருப்பத்தூர் மற்றும் வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முதல் கட்ட நிதியாக ரூபாய் 50,000 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது உடன் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News September 18, 2024

திருப்பத்தூரில் 100 டிகிரியை நெருங்கும் வெயில்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரியை நெருங்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 90 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு நேற்று 98.6 டிகிரியாக பதிவானது. இன்னும் ஓரிரு நாட்களில் வெயிலானது 100 டிகிரியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News September 18, 2024

திருப்பத்தூரில் ரூ.11 லட்சம் அபராத தொகையாக வசூல்

image

திருப்பத்துார் ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் இராமகிருஷ்ணன் தலைமையில் வாணியம்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன்,ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு அபராதத்தொகையாக ரூ.5,06,000 வரியாக ரூ.6,48,000 மொத்தம் ரூ.11,54,000 வசுலிக்கப்பட்டது .

error: Content is protected !!