India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை காலங்களில் மரத்து அடியில், தாழ்வான மின்கம்பிகள் உள்ள இடத்தில், இடிந்து விழும் தருவாயில் உள்ள சுவர் அருகில் போன்ற இடங்களில் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் யாரும் நிற்க வேண்டாம் என மின்வாரிய பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசர தேவைக்கு 100, 101, 102, 104, 108 உள்ளிட்ட Toll Free எண்களை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தே பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, வரலாற்று ஆர்வலர் காணிநிலம் மு.முனிசாமி, வணியம்பாடியை சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் 3 நடுகற்களை கண்டெடுத்துள்ளனர். முதல் நடுகல் 1.5 உயரத்தில் சிறிய அளவில் கையில் வாளை ஏந்திய கோலத்தில் காணப்பட்டது. 2&3 ஆம் நடுகல் நாயக்கர் காலத்தை சேர்ந்த 2.5 அகலமும், 2.5 உயரம் கொண்டதாக இருந்தது.
திருப்பத்துார் ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் 13 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.டிரைவர் பிரதீப்குமாரிடம் விசாரணை செய்ததில், குடியாத்தத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான லாரியில், ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படமான ‘பயமே அவன் ஆயுதம்’ குறும்படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். உடன் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்திடவும், ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேற்று அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட கண்காணிப்பாளர்களை இடமாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூரின் புதிய எஸ்.பி-ஆக சென்னை துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திரா எல்லை வொளித் மணி பாண்டா பகுதியில் திருப்பத்தூர் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்ஸில் கள்ளச்சாராயம் வருகிறதா என சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கடத்தி வந்த ஒரு தனியார் பஸ் பறிமுதல் செய்து டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக இச்சோதனை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.