Tirupathur

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (2/3)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/3)

image

திருப்பத்தூர் கிராம பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போகும் காவல்துறையை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்னுடைய WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் எனவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கூறியுள்ளார்.

News August 14, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவலர்களுக்கு எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போகும் காவல்துறையை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்னுடைய WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் எனவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கூறியுள்ளார்.

News August 14, 2024

திருப்பத்தூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?

News August 14, 2024

திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

News August 14, 2024

எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் கே.சி வீரமணி திடீர் சந்திப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அதிமுகவின் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி ஆகிய இருவரும் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடையுள்ளனர். மேலும் இருவரும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 14, 2024

ஜலகாம்பாறை சுற்றுலா தளத்தை காணொளி மூலம் முதல்வர் திறப்பு

image

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, சுற்றுலா தலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சுற்றுலா தளத்தை காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜலகாம்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

News August 14, 2024

திருப்பத்தூரில் பத்திரிகையாளர்களை சந்திக்க எஸ்.பி அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பியாக கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் இன்று தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களை சந்திக்க இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!