India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக தினந்தோறும் பாலக்காடு வரை பாலருவி( வ.எண்-16791) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கமாக தினந்தோறும் இரவு 11.20 க்கு நெல்லை வந்து சேரும். தற்போது வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில்வே கால அட்டவணை மாறி உள்ளதால் இனி அந்த ரயில் இரவு 10:55க்கு நெல்லை வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (டிச.30) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என டி.ஆர்.ஓ சுகன்யா தெரிவித்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை ஒட்டி,“பாளை கேடிசி நகர், நாங்குநேரி மற்றும் பணகுடி ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்” என கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட மின் விநியோகம் மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று (டிசம்பர் 28) செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தொடர் விடுமுறையில் வெளியூர் செல்லும் போது மின் நுகர்வோர் தங்கள் மின் கட்டணங்களை செலுத்த மின்வாரியத்தின் கைப்பேசி செயலியை பயன்படுத்தி எளிதாக கட்டணம் செலுத்தலாம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த்-ன் முதலாம் ஆண்டு நினைவு தின கூட்டத்தில் சென்னையில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரோடு நிகழ்வில் பங்கெடுத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை இன்று(டிச.28) வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆபத்தான மற்றும் விபத்து ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் செல்பி எடுக்கும் இன்பம் ஒருவரின் உயிரை இழக்க காரணமாகி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதை தவிருங்கள் என்று நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளனர். *ஷேர்*
நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று டெல்லிக்கு சென்று மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை, விகே புரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையின் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நேற்று நீதிபதி அளித்த தீர்ப்பில் பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் or காணாமல் போன மூல பத்திரம் கிடைக்கவில்லை என்று காவல்துறையில் சான்று வாங்கி வர வேண்டும் என்று பத்திரபதிவுக்கு வருபவர்களை கட்டாயப்படுத்த கூடாது; பத்திரத்தின் நகலை தாக்கலை செய்தாலே அதனை வைத்து பத்திர பதிவு செய்யலாம் என்றார். *ஷேர்*
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று (டிச.27) மாலை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது- இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். இதில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மற்றும் நெல்லை சிஎன் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி உள்பட 9 பேர் தங்களின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு நிதி கேட்டு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்சிடம் மனு அளித்தனர். அதன் பெயரில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து மேற்கொண்ட நபர்களுக்கு மொத்தம் ரூ.19.50 நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த தகவலை இன்று எம்பி ராபர்ட் புரூஸ் பகிர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.