India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்

நெல்லை மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <

நெல்லை மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களே; உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான புகார்கள் இருந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் உதவி எண் ஆகும். மாணவர்களின் கல்வி சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். *ஷேர் செய்யுங்கள்*

நெல்லை மாவட்டத்தில் பூங்காக்கள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டு, சமூக நீதி வாசகங்கள் எழுதப்படுகின்றன. திறந்தவெளி சிறுநீர் கழிக்காத மாநகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி பள்ளி சுவரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர், மாந்திரீக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் சிரிப்பையும் சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது. *ஷேர் பண்ணுங்க

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பாளை St. John’s கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் உடனே உங்கள் சுயவிபரம் (Resume), கல்விச்சான்றுகளுடன் மிஸ் செய்யாமல் கலந்து கொள்ளுங்கள். உடனே SHARE பண்ணுங்க

நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.