India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் ஆறு இடங்களில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மீண்டும் கேரளாவுக்கே மருத்துவ கழிவுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என பசுமை தீர்ப்பாயம் கேரளா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி பள்ளி மாணவர்களுக்கு (ஜன.4) சனிக்கிழமை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண கைப்பிடி கொண்டு சைக்கிளையே பயன்படுத்த வேண்டும். நெல்லை ஆட்சியர் இந்த தகவலை(ஜன.1) தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி-பாபநாசம்-தென்காசி இடையில் அரசு ஏ.சி. பேருந்துகள் ஓடியது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வார நாட்களில் காலியாக பயணிக்கும் நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்திலிருந்து 10 ஏசி பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் காப்பு கட்டு, இரவு 7.45 மணிக்கு நடராஜர் சிகப்பு சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் whatsapp எண்ணிற்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு ஆப் ஏபிகே ஃபைல் வந்தால் அதனை திறந்து பார்க்க வேண்டாம். ஏனென்றால் அதனை நீங்கள் திறந்தவுடன் உங்களது தகவல்கள் திருடப்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார் . *ஷேர்*
நெல்லை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவம் 4ம் தேதி காலை 6.30.மணிக்கு மேல் 7.30.மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி, 5.1.2025 முதல் 13.1.2025 வரை நடைபெறும் என நெல்லையப்பர் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு தாமிர சபை மண்டபத்தில் பசு தீபாரதனை மற்றும் நடராஜர் திரு நடன காட்சி நடைபெறும்.
நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் ஓர் ஆண்டு பணி முடித்த தாசில்தார்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(ஜன.1) மாலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி 12 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 6 துணை தாசில்தார்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் தாசில்தார்கள் புதிய இடத்தில் பொறுப்பேற்பார்கள்.
நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (25). இவர் நாங்குநேரி பகுதியில் அடிதடி கொலை முயற்சி செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது கேட்டுக் கொண்டதற்கு இணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து கலெக்டர் உத்தரவின்படி இசக்கி பாண்டி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஜனநாயக முறையில் குரல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமியை சாடிஸ்ட் மனநிலை கொண்டவர் என அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ரகுபதியின் செயல் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வேகம் அதிகரிப்பால் இதன் பயண நேரம் ஐந்து நிமிடம் குறையும். இதுபோல் புருலியா – நெல்லை வாராந்திர விரைவில் தாதர் – நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நெல்லை எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதன் பயண நேரம் 35 நிமிடங்கள் குறைகிறது. பல தென் மாவட்ட முக்கிய ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.