Tirunelveli

News January 12, 2025

108 ஆம்புலன்சில் பணிபுரிய அரிய வாய்ப்பு

image

நெல்லை மாவட்டம் கீழ்முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 108 ஆம்புலன்ஸில் பணி புரிவதற்கு டிரைவர், உதவியாளர் நேர்முகத் தேர்வு நாளை ஜன.13ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் 8925941973 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் அனைவரும் அசல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். (பயனுள்ளவர்களுக்கு பகிரவும்)

News January 12, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்: காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை செந்தில் நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நகைச்சுவை அரங்கம் மற்றும் பொங்கல் கவியரங்கம் நடைபெற உள்ளது. செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் 9ம் திருநாளான இன்று பகல் 11:30 மணிக்கு தேரோட்ட வைபவம் நடைபெற உள்ளது. கோபாலசாமி கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் ராபர்ட் மூன்றாம் நாள் வழிபாடு நடக்கிறது.

News January 12, 2025

திருடிய பணத்தில் சொகுசு வீடு கட்டிய வேலைக்கார பெண்

image

பாளை வடக்கு சாலையை சேர்ந்த ரஞ்சன்(42). தொழிலதிபரான வீட்டில் 2.5கிலோ தங்க நாணயங்கள் கடந்து சில மாதங்களுக்கு முன்பு மாயமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் இவரது வீட்டில் பாளை அண்ணாநகரை சேர்ந்த ஒரு பணிப்பெண் 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில் திருடி இந்த பகுதியில் சொந்த வீடு கட்டி வருவது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 12, 2025

நெல்லை கோட்டத்தில் இருந்து 650 அரசு சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் நேற்று சென்றன. சென்னையில் இருந்து 200 ,கோவை 40, திருச்சி 40 ,மதுரை 100பேருந்துகளும் ,விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து 225 பேருந்துகளும் ,நெல்லை மாநகர பகுதியில் 45 டவுன் பேருந்துகளும் இயக்கப்படுகிறது .இதே போல் நெல்லை மாவட்டத்தில் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News January 11, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாளர்கள் நியமனம்

image

நெல்லையில் குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சிறப்பு சிறார் காவல்துறையில் 2 சமூக பணியாளர்கள் ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://tirunelveli.nic.in விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து ஜன.27 குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

சனி ஞாயிறுகளில் வசூல் மையம் செயல்படும்

image

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மாநகராட்சிக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாகும் .எனவே வருகிறார் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாநகராட்சியில் வசூல் மையங்கள் செயல்படும். எனவே இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் . *ஷேர்

News January 11, 2025

2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு

image

பாளையங்கோட்டை ராஜா கோபாலபுரத்தை சேர்ந்தவர் மாணவி அனுஷா. இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது வீட்டின் அருகே ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை களம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவி அனுஷாவை நேற்று பாராட்டியுள்ளார்.

News January 11, 2025

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

image

சென்னை – திருநெல்வேலி இடையிலான ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், அதிவேகத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு இரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜனவரி 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அன்றிலிருந்து கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

News January 11, 2025

மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்

image

திருப்பணிகரிசகுளத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(60), இவரது மருமகன் சுடலைமுத்து. கடந்த 29ம் தேதி சுடலைமுத்துக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மகள், மருமகன் ஆகியோரை சமரசப்படுத்த இசக்கிமுத்து வந்தார், அப்போது ஆத்திரமடைந்த சுடலைமுத்து தனது மாமனாரை கத்தியால் குத்தினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்து நேற்று உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2025

வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு 

image

திருநெல்வேலி – எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜன.15ஆம் தேதி அன்று முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலில் available என்று காண்பித்து இருக்கை காண்பிக்கவில்லை என்று மக்கள் அச்சப்படவேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்த பின்னர் CNF என்று வரும் வண்டி புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக இருக்கை எண் வரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!