India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி: தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இளம்பெண் (பிப்.20) மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பினார். பள்ளி அருகே காரில் வந்த அந்த நபர், பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி தமது காரில் ஏற்றிக்கொண்டார். கார் கன்னியாகுமரி சாலையில் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் காரை நிறுத்தி போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் காருடன் ராஜூ(35) என்பவரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகில் உள்ள விஜய அச்சம்பாடு கிராமத்தில் வான்வெளி கைலாசநாதர் சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் வரும் புதன் கிழமை இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரிக்கு சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக பிரமுகருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சபங்கேற்கிறார். அவருக்கு கோவில் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம் 23-02-25 காலை 9 மணி முதல் 2 மணி வரை கேடிசி நகர் மங்கம்மா சாலை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் இன்று (பிப்.21) காலை பாளையங்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கே வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற 6 பேரை பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை, பணகுடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னகுற்றாலம் என்றழைக்கப்டும் குத்தரபாஞ்சான் அருவி அமைந்துள்ளது.தென்மேற்கு,வடகிழக்கு பருவமழையில் இங்கு நீர் கொட்டுகிறது. சுற்றுவட்டார மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர். இதனருகிலேயே கன்னிமார் ஓடை அமைந்துள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவியில் தற்போது கன்னிமார் ஓடையில் மட்டும் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. SHARE IT
நெல்லை கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்பி எடுப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதால். இங்கு புகைப்படம் எடுக்க போலீசார் தற்போது தடை விதித்துள்ளனர். மேலும் இது குறித்து அறிவிப்பு பேனரையும் வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், சவுந்திரலிங்கபுரத்தில் நேற்று இரவு முன்விரோதத்தில் 2 பேர் டீக்கடைக்காரரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.02.2025) உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும் கன்று பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். எனவே இந்த நோய் தாக்குதலில் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும். எனவே இதை பயன்படுத்தி தங்கள் கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று( பிப்.20) முதல் தொடங்கி வரும் மார்ச் 10 வரை நடைபெறுகிறது என கலெக்டர் சுகுமார் கால்நடை வளர்ப்போர்களுக்காக தெரிவித்துள்ளார்.
நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி முதல் சோதனை சாவடி திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.