Tirunelveli

News January 22, 2025

நெல்லை – திருச்செந்தூர் ரயில் நேரம் வேண்டுகோள்

image

நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதில் கோயிலுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி பணிக்கு செல்பவர்களும் அதிக அளவில் செல்கின்றனர். இந்த நிலையில், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில், புதிய அட்டவணைப்படி காலை 10.10 மணிக்கு புறப்படுகிறது. இதனால் நெல்லை வரை அலுவலகம் வருபவர்கள் சிரமப்படுவதால், பழைய அட்டவணைப்படி இயக்க கோரிக்கை.

News January 22, 2025

முக்கிய ரயில் சேவை 3 மாதம் நீட்டிப்பு: முன்பதிவு தொடக்கம்

image

நெல்லை ஷாலிமார் இடையே ரயில் சேவை நாளை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், இந்த ரயில் சேவையை வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில் வியாழன் தோறும் அதிகாலை 1:50 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படுகிறது. இதற்கு தற்போது முன்பதிவு நடக்கிறது.

News January 22, 2025

நெல்லையில் முதல்வர் துவங்கி வைக்கும் திட்டங்கள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 6,7ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அப்போது ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்ட பணிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.4000 கோடியில் டாடா சோலார் உற்பத்தி நிலையத்தையும் முதல்வர் துவங்கி வைக்க உள்ளதாக பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

கழிவுகள் கொட்டிய நபர்  மீது பாய்ந்த குண்டாஸ்

image

நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாயாண்டி என்பவர் கடந்த 19ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான செல்லதுரையும் இன்று (ஜன.21) குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 21, 2025

நெல்லையில் 11 ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

image

நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களான சங்கீதா, பொன்ராஜ், விஜி, ராஜேஷ், ராமேஸ்வரி, மாரியப்பன், ரசிதா, பொன்மணி, சுந்தரி, ஜெயலட்சுமி, கோமதி உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி இன்று (ஜன.21) வெளியிட்டுள்ளார்.

News January 21, 2025

நெல்லையிலிருந்து சென்ற கைதி சுட்டுப்பிடிப்பு

image

கர்நாடக மாநிலம் மங்களூரு வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நெல்லையில் கர்நாடக போலீசார் மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் இன்று போலீசார் நெல்லையில் இருந்து கைதிகளை அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கண்ணன் மணி என்பவரை சுட்டுப்பிடித்துள்ளனர். இதில் மூன்று போலீசார் காயமடைந்துள்ளனர்.

News January 21, 2025

பறவைகள் கணக்கெடுக்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

image

தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுப்பின் 15 ஆவது நிகழ்ச்சி மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தில் வருகின்ற 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/J3mVGSbENUMwPqVF6 என்ற இணையதளத்தில் மூலம் நாளை மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 21, 2025

வங்கி கொள்ளையில் இருவர் அம்பையில் ஆஜர்

image

மங்களூர் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் நெல்லை களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ்வா ஆகிய 2 பேரை மங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் துப்பாக்கிகள் மற்றும் பணம் நகைகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அம்பை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்களையும் இன்று நீதிபதிக்கு முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினர்.

News January 21, 2025

கொலை வழக்கில் 7 பேர் குண்டாஸ்

image

நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி. என்பவர் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிச.20 அன்று நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை ஓட, ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

News January 21, 2025

நெல்லைக்கு வந்தே பாரத்தை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு

image

நெல்லையில் இயங்கும் வந்தே பாரத் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் போல திருநெல்வேலியில் இருந்து கொல்கட்டா வரையும், சென்னை தாம்பரத்திலிருந்து கொல்கட்டு வரையும் இரண்டு புதிய அம்ரித் ரயில்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை இந்திய பிரதமர் மோடி துவங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!