Tirunelveli

News September 12, 2025

நெல்லை: 50% மானியத்தில் கிரைண்டர்!

image

நெல்லை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.

News September 12, 2025

நெல்லை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

image

திருநெல்வேலி, மானூரில் 2018-ல் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி மகாராஜனுக்கு திருநெல்வேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.மேலும் முறையின்றி தடுத்தல் மற்றும் ஆபாசமாக பேசிய குற்றங்களுக்காகவும் தண்டனை வழங்கப்பட்டது. காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டினார். இந்த ஆண்டில் மட்டும் 17 கொலை வழக்குகளில் தண்டனை வழங்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2025

மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நீட்டிப்பு

image

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற சரஸ்வதி பூஜை தினம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இங்கு மூன்றாண்டு படிப்புகளாக நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கலை கற்றுத் தரப்படுகிறது. கற்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ், சைக்கிள் வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் சிவகலை தெரிவித்தார்.

News September 12, 2025

நெல்லை வருகிறார் கமல்ஹாசன்!

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதன்படி வரும் செப்.20ம் தேதி நெல்லை மண்டலத்தில் கமலஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News September 12, 2025

ஒரே நாளில் மாநகராட்சிக்கு ரூ.70 லட்சம் வரி வசூல்

image

நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. இதில் சொத்து வரி குடிநீர் வரி உள்பட பல்வேறு வரி வசூல் செய்யப்பட்டது. பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் வரி வாக்கி செலுத்தி வந்தனர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News September 12, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 11, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News September 11, 2025

கூடங்குளம் அருகே கோவில் சிலை உடைப்பு: இருவர் கைது

image

கூடங்குளம் அருகே வைராவி கிணறு கிராமத்தில் பிரபல பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட போது, ​​கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில், கோவில் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக தவசிகுமார் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்களிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நெஜில்சன் விசாரிக்கின்றனர்.

News September 11, 2025

நெல்லை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

தற்கொலைக்கு கவுன்சிலிங் அவசியம் – நெல்லை எஸ்பி

image

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு கவுன்சலிங் அவசியம் என எஸ்பி பேசினார். மருத்துவமனையில் இலவச ஆலோசனை மையம் உள்ளதாக டாக்டர் ரேவதி தெரிவித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

error: Content is protected !!