India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மார்ச்.11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
பணகுடி பகுதியில் குளத்துப் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் தொழிலாளி ராஜ்குமார் என்பதும் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்களை கம்பால் சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சங்கர், சரவணன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை நேற்று பணகுடி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை சரகத்தில் 13 வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக, மினி பேருந்துகளை இயக்க அனுமதி சீட்டு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை பகுதியில் 2022 இல் வைகுண்டம் என்பவர் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நிதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி செல்வராஜ் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தோணி ராஜ், ராஜன், லீலா, பாபு அலெக்சாண்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் சந்திப்பு நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிட அறைகள், வாகன நிறுத்தங்கள் ஏலம் விடப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர் (அ) அவரது அதிகாரம் பெற்ற மாநகராட்சி அலுவலர் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் வைத்து 20ம் தேதி நடைபெறும். ஏலத்திற்கு அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார். *ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் தமிழ்நாடு திருநெல்வேலி கிளைக்கு கோழிக்கறி, முட்டை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்வதற்கும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கும் ஏலம் விடப்படுகிறது. இதற்கான படிவத்தை கொக்கர குளத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் அலுவலகத்தில் பெற்று இன்று முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கிளை மேலாளர் இன்று தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க
நெல்லை மாவட்டத்தில் 4 தினங்கள் கோடை மழை அடித்து நொறுக்கியது. கடந்த 2 தினங்களாக வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் பூமத்திய ரேகை ஒட்டி புதிய காற்று சுழற்சி உருவாகிறது. வரும் 11ம் தேதியை ஒட்டிய நாட்களில் இலங்கை, குமரி கடலை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க
நெல்லை, கொல்லம், குருவாயூர் ரயிலில் நெல்லை, நாகர்கோவில் இடையே உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. *எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க*
பணகுடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜ்குமாரும்(30) இவரது நண்பர் சங்கரும்(24) நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜ்குமாரை சங்கர் தாக்கியுள்ளார். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.
நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை உட்கோட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.