Tirunelveli

News March 15, 2025

தவெக செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 15, 2025

முன்னீர் பள்ளத்தில் தொழிலாளி குத்திக் கொலை

image

முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தொழிலாளி மாரியப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் இடையே மது வாங்கி குடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கிராஜ் கத்தியால் மாரியப்பனை வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று உயிரிழந்தார்.

News March 15, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருநெல்வேலி ஊரகத்திற்கு சந்திரசேகர், நாங்குநேரி பிரேமா ஸ்டாலின், வள்ளியூர் சுடலைமுத்து, சேரன்மகாதேவி ஜெயசீலன், அம்பாசமுத்திரம் ரமேஷ் கண்ணா ஆகியோர் இன்று (14ம் தேதி) ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

News March 14, 2025

பாளையங்கோட்டை சிறை ADSP சஸ்பெண்ட்

image

பாளையங்கோட்டை சிறை கூடுதல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News March 14, 2025

நெல்லையில் திருமண தடைகள் விலகும் ஆலயம்

image

நெல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஒன்பது நவ கைலாய தலங்களில் குரு தலம். கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடைகள் விலகுவதாக ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*

News March 14, 2025

புதிய நகர் நல மையங்களில் பணியாற்ற வாய்ப்பு

image

நெல்லை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகர் நல மையங்களில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மெடிக்கல் ஆபீஸர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பத்தை tirunelveli.nic.in  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மார்ச்.24 க்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

News March 14, 2025

நெல்லை: வாதாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த வழக்கறிஞர் 

image

நெல்லை தச்சநல்லூர் மேலகரையை சேர்ந்தவர் தங்கராஜ் (40)வக்கீலான இவர் நேற்று வழக்கு ஒன்றில் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருந்தார் .திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 14, 2025

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் ரத்து

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே மார்ச் 20 முதல் 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் எண் 5004, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் எண் 5003 ஆகிய 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்வதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 14, 2025

நான் முதல்வன் திட்டத்தில் இலவச ஓட்டுனர் பயிற்சி

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சாலை போக்குவரத்து நிறுவனம் தமிழ்நாடு அரசு மேம்பாட்டு கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in.skill வெப்சைட்டில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 14, 2025

தமிழக பட்ஜெட்டில் நெல்லையின் அறிவிப்பு

image

▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.

error: Content is protected !!