Tirunelveli

News September 25, 2025

நெல்லை: வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்வு

image

நெல்லை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவ சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வருகிற 29ம் தேதி காலை 9 மணிக்கு நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருங்கால வைப்பு நிதி 2.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், தொழிற்சங்கம் பங்கேற்கலாம்.

News September 25, 2025

நெல்லை: ஒரே நாளில் 2 பேர் மீது குண்டர் சட்டம்

image

நெல்லை, தாழையூத்தை சேர்ந்த அருண் என்பவர் மீது தாழையூத்து போலீசில் கொலை முயற்சி வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதுபோல் மானூர் எட்டான்குளத்தை சேர்ந்த கார்த்தி மீது மானூர் போலீசில் கொலை மிரட்டல் அடிதடி வழக்குகள் உள்ளன. இருவரையும் மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவு படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கபட்டனர்.

News September 25, 2025

நெல்லை: இன்று ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

இன்று செப்டம்பர் 25 காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விக்கிரமசிங்கபுரம் நாராயண குரு திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. தெற்கு கள்ளிகுளம் விசிஆர்பி மையத்தில் இன்று காலை 9 மணி முதல் உங்களுடன் ஸ்டாலின் மனு பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.

News September 25, 2025

நெல்லை: கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News September 25, 2025

நெல்லை: பைனான்ஸ் நிறுவனத்தில் மோசடி; பெண் ஊழியர் கைது

image

நெல்லை சந்திப்பு பகுதியில் தனியார் காம்பளக்ஸ்சில் உள்ள தனியார் பைனான்ஸில் பணியாற்றிய மேலாளர் முத்தம்மாள் என்பவர் பணம் ரூ.4,00,000 வசூல் செய்து போலியாக Certificate தயார் செய்து சாந்திபிரியா என்பவருக்கு கொடுத்து உள்ளார். இது சம்பந்தமாக சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முத்தம்மாளை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News September 25, 2025

நெல்லையப்பர் வெள்ளோட்டத்தை காண ரெடியா?

image

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் புதிதாக வெள்ளி தேர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. தேரை வெள்ளோட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு புதிய வெள்ளைத் தேர் உருவாகியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 25, 2025

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

image

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கல்லூரி படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 25, 2025

47 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. பங்கேற்க 13 ஆயிரத்து 621 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News September 24, 2025

மாநகரில் இன்றிரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம், காவல் சரகம், வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 24, 2025

அகில இந்திய தொழில் தேர்வு கலெக்டர் வேண்டுகோள்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைவினை கலைஞர் பயிற்சி திட்டத்தில். விண்ணப்பங்களை நடத்தப்பட உள்ள அகில இந்திய தொழில் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை skilltnraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!