Tirunelveli

News September 26, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (செப்.25) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 26, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று(செப்.25) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 25, 2025

அசிஸ்டன்ட் டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சி முகாம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு வேளாண்மை பொறியியல் துறை மூலம் அசிஸ்டன்ட் டிராக்டர் ஆபரேட்டர் 2ம் கட்ட பயிற்சி நெல்லை அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடைபெற உள்ளது. 15 முதல் 30 நபர்களுக்கு 27 நாள் பயிற்சி அளிக்கப்படும். நேரிலோ அல்லது candidate.tnskill.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பயிற்சி முடிப்பவர்களுக்கு டாக்டர் ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும்.

News September 25, 2025

மாரத்தான் போட்டி; இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியானது 28.9.2025 அன்று தொடங்குகிறது. 17 மற்றும் 25 வயதிற்குட்பட்ட 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும்
நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5000ம், 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000ம் வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் வரும் 28ம் தேதி அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வரும்படி ஆட்சியர் சுகுமார் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News September 25, 2025

மாணவர் தாக்குதல் சம்பவம் – காவல்துறை விளக்கம்

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: டோனா ஊரில் செயல்படும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இருவர் இடையே வகுப்பறையில் நேற்று ஏற்பட்ட வாய் தகவலின் தொடர்ச்சியாக இன்று ஒரு மாணவர் அரிவாளால் மற்றொரு மாணவனை முதுகில் தாக்கி சம்பவம் ஏற்பட்டது. இதை தடுக்க முயன்ற மற்றொரு மாணவர் கையிலும் காயம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 25, 2025

நெல்லை: பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – புதிய தகவல்

image

ஏர்வாடி அருகே பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒரு மாணவனை மற்றொரு மாணவர் வெட்டியுள்ளார். இது தனிப்பட்ட வாக்குவாதத்தில் நிகழ்ந்தது. இதை பள்ளியில் கொடூர தாக்குதல், இரு சமூகங்களுக்கு இடையேயான பெரிய சம்பவம் அல்லது மோதல் என்று மிகைப்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி சேனல்களில் வெளியிடப்படுவது முற்றிலும் தவறானது என எஸ்பி சிலம்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.

News September 25, 2025

அரசு பஸ் டிரைவர்,கண்டக்டர் பணி நேர்காணல் துவக்கம்

image

அரசு போக்குவரத்து கழக டிரைவர் கண்டக்டர் பணியிடங்களுக்கு நேர்காணல் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேர்காணல் முடிவடைந்ததும் தேர்வு பெற்றவர்கள் விபரம் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 25, 2025

நெல்லை: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

நெல்லை மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 25, 2025

நெல்லை: போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

image

பெங்களூரு தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் தமிழகத்தில் காற்றாலை அமைக்கிறது. நெல்லை செழியநல்லூரில் உள்ள 8 ஏக்கர் 11 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. நிறுவன இயக்குனர் மூர்த்தி, நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, செல்லத்துரை, ரஞ்சித்குமார், செல்சாமி, சண்முகம், பழனி, மற்றொரு சண்முகம் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை.

News September 25, 2025

நெல்லை தீயணைப்பு துறைக்கு ரூ.19 லட்சத்தில் உபகரணங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கவும் மீட்பு பணியில் ஈடுபடவும் 19 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தீயணைப்பு துறைக்கு நேற்று வழங்கபட்டது. மோட்டார் பொருத்தப்பட்ட படகு மரங்கள் கட்டட இடிபாடுகளை வெட்டும் கட்டர்கள், லைப் பாய்கள் விளக்குகள் வாக்கி டாக்கிகள் இதர உபகரணங்களை அமைச்சர் நேரு நேற்று வழங்கினார்.

error: Content is protected !!