India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று (பிப்.27) முதல் வரும் ஞாயிறு வரை மழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கன முதல் மிக கனமழையும், குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே நெல்லை மக்கள் 3 நாட்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஏப்ரல்.15 ஆம் தேதி ஆகும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று(பிப்.26) தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியின் கழிவறையில் இறந்து கிடந்த விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடினர். இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பர்கிட் மாநகரம் அண்ணாநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வருகின்ற பிப்.28, மார்ச். 1,2 ஆகிய இந்த வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு பேருந்து அறிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செய்ய QR கோடினை வெளியிட்டு செய்தி மக்கள் தொடர்புதுறை இன்று (பிப்.26) அறிக்கை வெளியிட்டுள்ளது. *ஷேர்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி கல்வி வட்டாரத்தில் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி வரும் கிருஷ்ணவேணி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் பிறப்பித்துள்ளார். அவர் மீது தொடர்ந்து ஒழுங்கீன செயல்கள் புகார்கள் வந்ததால் விசாரணை நடத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய 3 நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உட்பட 12 மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அதிகாரிகள் முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அணைகளின் இன்றைய 26- ந்தேதி நிலவரம்: பாபநாசம் உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 85 அடிநீர் வரத்து : 187.453 கன அடி வெளியேற்றம் : 1100 கன அடி, சேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 83 அடி நீர்வரத்து : NILவெளியேற்றம் : NIL, மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு : 88.78 அடி நீர் வரத்து : 64.58 கனஅடி வெளியேற்றம் : 435 கன அடியாக இருக்கிறது.
நெல்லை மாவட்ட மக்களுக்கு மின்சார துறையின் அறிவிப்பு – மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் TNPDCL OFFICIAL APP ) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைத்தளங்கள், மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம்.
நெல்லை ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை மின்சார துறையில் உள்ள அஜிஸ்குமார்JE,செல்வின்(CA) ஆகியோர் மின் இணைப்பு கேட்டு வருவோரிடம் ஒரு மின் இணைப்புக்கு ₹50,000 பெயர்மாற்றம் Tariff Charge ஆகியவற்றுக்கு பணம் தந்தால் மட்டுமே மின் இணைப்பு பெறமுடியும் என மிரட்டி பணவசூல் வேட்டை நடத்தி வருவதினால் இவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு இயக்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.