Tirunelveli

News April 3, 2025

டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவர் பலி

image

நெல்லை பத்தமடை தைத்கால் தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(17) ஆரக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பத்தமடையில் இருந்து சேரன்மகாதேவிக்கு அவர் பைக்கில் சென்ற போது டிராக்டர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்  உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2025

வக்கீலை வெட்டிய இருவருக்கு 1 ஆண்டு சிறை

image

அம்பை அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை கடந்த 2021-ஆம் ஆண்டு இடப்பிரச்சனை சம்பந்தமாக அவரை அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றவாளியான வினோத் என்ற உலகநாதன் (29) பூதபாண்டியன் (58)ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 3, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ ஏப்ரல்.2 ] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

image

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

நெல்லைக்கு கன மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (ஏப்.4) அன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 2, 2025

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கொடியேற்றம்

image

களக்காட்டில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், இரவில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

News April 2, 2025

நெல்லையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெண்களுக்கான 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 60 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 2, 2025

நாங்குநேரி தொழில்பேட்டை விரைவில் உருவாகும்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நாங்குநேரி எம்எல்ஏ பேசுகையில் நாங்குநேரி தொழிற்பேட்டை எப்போது அமையும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜா நாங்குநேரி தொழில்பேட்டை பிரச்சனைகள் வெகு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிட்கோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்ட சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு நிச்சயமாக அங்கு தொழில்பேட்டை உருவாகும் என்றார்.

News April 2, 2025

நெல்லையில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒருவர் பலி

image

கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்தவர் ராமையா (55). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரில் நேற்று குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர். அதில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதில் 21 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வியாபாரிகள் காலாவாதியான பொருட்கள் விற்கக் கூடாது என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!