India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கடந்த மூன்று தினங்களாக கனமழை நீடிக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பதிவான மழை அளவு வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் அதிகபட்சம் நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 117 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால் குறிச்சியில் கடந்த 27ஆம் தேதி பெரிய அளவில் கரடி ஒன்று நடமாடியது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து நெல்லை மாவட்ட வனத்துறையினர் கரடி பிடிப்பதற்கு கூண்டு வைத்தனர். மூன்றாவது நாளாக நேற்று கரடி கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 80.80 அடிநீர் வரத்து : நீர் வரத்து அடி வெளியேற்றம் : 1100 கன அடிசேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 93.57 அடி நீர்வரத்து : NILவெளியேற்றம் : NILமணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு : 88.03 அடி நீர் வரத்து : 674.29 கனஅடி வெளியேற்றம் : 430 கன அடியாக இருக்கிறது.
விகேபுரம் கட்டப்புளி தெருவை சேர்ந்த ரேவதி (26) விகேபுரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். அசலுக்கு அதிகமாகவே வட்டி கட்டியுள்ளார். மீண்டும் நிறுவன ஊழியர்கள் அவரை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து முறையான உரிமம் இல்லாமல் நிதி நிறுவனம் நடத்திய சுரேஷ்,செல்வகுமார், அசோக் ராஜா ,சங்கர் ராஜா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தில் சாஸ்தா கோயிலுக்கு என தேரோட்டம் நடைபெறுவது வள்ளியூர் அருகே உள்ள சித்தூரில் மட்டும் தான். சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடக்கும். கேரளாவை பூர்வீகமாக கொண்டு ஐயப்பனின் சகோதரராக மகராஜேஸ்வரர் கருதப்படுவதால் இக்கோயிலுக்கு கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். சாஸ்தா கோயிலில் தேரோட்டம் நடக்காது. ஆனால் இங்கு மட்டும் தேரோட்டம் நடைபெறுவது தனிச் சிறப்பு
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 7:00 மணியுடன் நிறைவேற்ற 24 மணி நேரத்தில் 525. 20m கோடை மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊத்து பகுதியில் 81 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. காக்காச்சி 72, மாஞ்சோலை 55 மில்லி மழை பெய்தது. பாபநாசத்தில் 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று பகலிலும் தொடர்ந்து மழை பெய்கிறது.
நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக் கழகம் இன்று மார்ச் 1ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆபராத தொகையில் 25 சதவீதம் முதல் 30% வரை தள்ளுபடி செய்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு உங்கள் இல்லத்தில் வைத்து ரூ. 35 மட்டுமே செலுத்தி வெறிநோயின் நோய் ஊசி போட்டுக்கொள்ளும் வசதியினை கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முகாம் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பாளை முருகன் குறிச்சியில் இருந்து மார்க்கெட் சந்திப்பு வரை மற்றும் சமாதானபுரத்திலிருந்து நீதிமன்றம் சந்திப்பு வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் 6 புதிய பெட்டி பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று மார்ச் 1 முதல் 20ஆம் தேதி வரை கே டி சி நகர் வழியாக சமாதானபுரம், பாளை பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் சீனிவாச நகர் ஐக்கிரவுண்ட் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என மாநகர காவல்துறை தெரிவித்தனர். *ஷேர்
Sorry, no posts matched your criteria.