India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மகன் இசக்கி. கூலித்தொழிலாளியான இசக்கி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி பரிதாபமாக பலியானார்.

நெல்லை, களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் வடுவூர்பட்டி சாலை ஓரங்களில் நேற்று காலை சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்திருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அது சிறுத்தையின் கால் தடம் தானா என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் மின் குறை தீர் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் 21ம் தேதி பகல் 11 மணிக்கு குறை தீர் கூட்டம் நடைபெறும். 24ம் தேதி நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 28ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்டை அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒன்றிய, மாநில போட்டி தேர்வில் காண சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வருகிற 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெறும் 100 பேர் மட்டும் அனுமதி என்பதால் 9499055929 என்ற கைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.

நெல்லையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணிகளில் வருகிற விஜயதசமி அன்று (அக்.2) மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 5 வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு சேர்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தலைமை ஆசிரியர்கள் செய்தனர் என அவர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற அக்.02 நெல்லை மாவட்டத்தில் மது கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்படும். இதை மீறி செயலபடும் மதுகூடாரங்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.29] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.29] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

நெல்லை மாநகர் பகுதி ஜனவரி – செப் வரை 9 மாதங்களில் 507 பேர் சைபர் குற்ற புகார் மனு அளித்துள்ளனர். ஆன்லைன் மூலம் சுமார் 5 கோடியே 41 லட்சத்தி 19,593 ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது வரை இதுதொடர்பாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.92 லட்சத்து 91 ஆயிரத்தி 648 மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 399 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.