India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுத்தமல்லியை சேர்ந்த ஹரிஹரசுதன்(21) என்ற வாலிபர் நேற்று பாளையில் ஒரு ஜவுளி கடைக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி உள்ளார். கடைக்காரர் கொடுக்க மறுக்கவே அங்கு பணி செய்த பெண்ணை அடிக்க முயன்று உள்ளார். உடனடியாக கடை உரிமையாளர் பாளை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ஹரிஹர சுதன் என்ற வாலிபரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, குடிநீர், லாரி முனையம் ,கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டப்பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நெல்லை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் முக்கிய பணிகள், வழக்குகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா விளக்கம் அளித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பணிபுரிந்து வருகின்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளத்துடன் இஎஸ்ஐ பலன்களை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா ஐஏஎஸ் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

டவுன் வேம்படி தெருவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வருமானத்தை அதிகரிக்க ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட நபர்கள் கூறியதை நம்பி 22 லட்சம் ரூபாய் பல்வேறு கணக்குகளுக்கு வாலிபர் ஆன்லைனில் அனுப்பினார். அவசர தேவைக்காக பணத்தை திரும்ப பெற முயற்சித்த போது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர் கொடுத்த புகாரில் 2 பேர் கைது.

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருநெல்வேலி மாவட்டம் டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ரத வீதிகளில் ரூ.15 கோடி மதிப்பில் அழகுபடுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மோனிகா ரானா இன்று (செப் 30) தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் 1.1.2025 முதல் நேற்று முன்தினம் வரைபண மோசடி தொடர்பாக 507 புகார்கள் பெறபட்டன. 5 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 593 ரூபாய் மோசடி செய்யபட்டுள்ளது. 399 வங்கி கணக்குகள் அவற்றில் இருந்த ரூ.75 லட்சத்து 84 ஆயிரத்து 339 கொடுக்கபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து 92 லட்சத்து 91 ஆயிரத்து 648 சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு திருப்பி அனுப்பபட்டது.

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பி டி ஓ 11 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் வட்டார ஊராட்சி பி டி ஓ பாப்பு களக்காடு பி டி ஒ ஆக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த பொண்ணு லட்சுமி அம்பை பி டி ஓ ஆக மாற்றப்பட்டுள்ளார். பாப்பாக்குடி பிடிஓ முருகேசன் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.

ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நெல்லையில் மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.1,800 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாமந்தி, கனகாப்பரம், முல்லை, பிச்சி, மல்லி என பல்வேறு பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை அதிகமாக உயர்ந்தாலும் பூக்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.30] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.