Tirunelveli

News October 2, 2025

தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் காந்தி படம்; கலைஞர் அசத்தல்

image

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று ஒரே நாளில் வருகிறது. எனவே இரு தலைவர்களுக்கும் அரசியல் பிரமுகர்கள் மரியாதை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செல்வகுமார் நூதன முறையில் தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் உருவங்களை ஓவியமாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

News October 2, 2025

நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

நெல்லை மக்களே; இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு கிளிக் செய்யுங்க
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 2, 2025

நெல்லை: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

நெல்லை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 2, 2025

நெல்லை: மாநகராட்சி வரி சலுகை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி மக்களுக்கு 2025-2026 ம் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் அவை அதிகபட்சமாக (ரூ.ஐந்தாயிரம்) வரை அளிக்க படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ரானா செய்தி வெளியிட்டுள்ளார். இத்தகவலை ஷேர் செய்யுங்க.

News October 2, 2025

நெல்லை: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகலவை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 2, 2025

நெல்லை: கல்குவாரியில் தவறி விழுந்த வாலிபர் பலி

image

ராதாபுரம் எல்கைக்கு உட்பட்ட காம நேரி தெற்கு பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக ராதாபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு இன்று தகவல் சென்றுள்ளது. இந்த தகவலின் பெயரில் ராதாபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கல்குவாரியில் தவறி விழுந்த வாலிபரின் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து காவல்துறையினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

News October 2, 2025

நெல்லை அரசு துறையில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு

image

நெல்லை மக்களே, மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்பையில் 44 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8th, 10th, டிப்ளமோ, நர்ஸிங், டிகிரி படித்தவர்கள் வருகிற அக்.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.6,000 முதல் 40,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும். நெல்லையில் அரசு துறையில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு. எல்லோரும் தெரிந்தகொள்ள ஷேர் செய்யுங்க.

News October 2, 2025

நெல்லை: 16 வயது சிறுமியின் ஆண் குழந்தை சடலமாக மீட்பு

image

அம்பை பேருந்து நிலையம் அருகே குறிப்பிட்ட ஒரு கட்டடத்தின் கழிவறை பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரனையில், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததும், ஆண் சிசு இறந்து பிறந்ததால் தாய் அந்த சிசுவை கழிவறை அருகே வைத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரனை.

News October 2, 2025

மாநகரில் இரவு காவல் படை அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.1) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 1, 2025

நெல்லை: பாலம் அகற்றம்; ஆட்சியர் உத்தரவு..!

image

இன்று (01/10/2025) திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தாலூகா கல்லிடைக்குறிச்சி திம்மராஜபுரம் தெரு பகுதியில் உள்ள, பழைய பாலம் நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியை பார்வையிட்டார். அப்போது திம்மராஜபுரம் பாலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், பழைய பாலம் சேதமடைந்து வருவதால் விரைவில் அப்பாலம் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!