Tirunelveli

News March 8, 2025

12 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில் கடந்த 24ஆம் தேதி முதல் புலிகள் கணக்கெடுப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டு சுமார் 12 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வனத்துறை குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. *ஷேர்

News March 8, 2025

நெல்லை: நில அளவீடு இணையத்தில் விண்ணபிக்கலாம்

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்<> லிங்கை<<>> கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க 

News March 8, 2025

நெல்லையில் ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம்

image

நெல்லையில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்

News March 8, 2025

நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் எழும்பூர் செல்லாது

image

சென்னையில் ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக நெல்லை தூத்துக்குடி இருந்து இன்று 8ம் தேதி புறப்படும் நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூர் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலானது பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ரயில்கள் தாம்பரம் வரை செல்லும்) *ஷேர் செய்யுங்கள்*

News March 7, 2025

நெல்லை: இரவு ரோந்து போலீஸ் அதிகாரிகள் விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் வள்ளியூர் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் திருநெல்வேலி ஊரகம் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் கண்ணன், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் உட்கோட்ட பகுதிகளில் ரோந்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அவசரகாலத்திற்கு தொடர்பு கொள்ளும் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News March 7, 2025

நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்வீக வீடு தெரியுமா.?

image

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ்க்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 18 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவின் பூர்வீக கிராமம் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி. அங்கு வந்து ஒரு விசிட் அடித்து சென்றிருக்கிறார் கீர்த்தி. SHARE IT

News March 7, 2025

ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோயில் சிறப்பு தெரியுமா.?

image

நெல்லை, ராதபுரத்தில் வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பக்தர்கள் மஞ்சள் காணிக்கையாகக் கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் திருமணம் செய்ய வருபவர்கள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருக்கும் மஞ்சளை உரலில் இடித்து விட்டு தான் திருமணம் செய்கின்றனர். 11 நாள் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தததாகும் . SHARE IT

News March 7, 2025

நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மார்ச்.11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

பணகுடி கொலையில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

image

பணகுடி பகுதியில் குளத்துப் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் தொழிலாளி ராஜ்குமார் என்பதும் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்களை கம்பால் சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சங்கர், சரவணன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை நேற்று பணகுடி போலீசார் கைது செய்தனர்.

News March 6, 2025

13 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அழைப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை சரகத்தில் 13 வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக, மினி பேருந்துகளை இயக்க அனுமதி சீட்டு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!