Tirunelveli

News October 4, 2025

நெல்லை: தாயுமானவர் திட்டம் விநியோக தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வருகிற 5 மற்றும் 6ம் தேதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று குடிமை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 4, 2025

நெல்லை: 6ம் தேதி பி எஃப் அலுவலக மேளா

image

மாணவர்கள், தொழில்துறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லையில் “பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கர் யோஜனா மேளா” வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை fx பொறியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை மேற்கொள்ளலாம் என பிஎஃப் மண்டல ஆணையர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்

News October 4, 2025

நெல்லை: குழந்தைகளின் ஆதார் APPLYக்கு ஈஸி வழி!

image

தென்காசி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்யுங்க. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கண்விழி கைரேகை தேவையில்லை. உங்க வீட்டுக்கே ஆதார் கார்டு வந்துடும்.SHARE பண்ணுங்க.

News October 4, 2025

நெல்லை – தாம்பரம் நாளை முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்

image

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகை தொடர் விடுமுறைக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மாலை 4:50 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மறு தினம் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

News October 4, 2025

நெல்லை மாணவர்களே – ரூ.15 ஆயிரம் வேணுமா??

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று உண்டு; விண்ணப்பங்களை மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் அக்.24ம் தேதிக்குள் வழங்க வேண்டும். (கூடுதல் விபரங்களுக்கு 0462-2502521) *ஷேர்

News October 4, 2025

நெல்லை: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 4, 2025

வள்ளியூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று மாற்றம்

image

வள்ளியூர், நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – கோவை (வண்டிஎண்.16321) எக்ஸ்பிரஸ் இன்று நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் – கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, வழியாக செல்லாது. ரயில்வே சாலை பராமரிப்பு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News October 4, 2025

நெல்லை மாணவர்களே – ரூ.15 ஆயிரம் வேணுமா??

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று உண்டு; விண்ணப்பங்களை மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் அக்.24ம் தேதிக்குள் வழங்க வேண்டும். (கூடுதல் விபரங்களுக்கு 0462-2502521) *ஷேர்

News October 4, 2025

ஜாதியை ரீதியிலான பதிவுகளுக்கு கடும் நடவடிக்கை – நெல்லை எஸ்.பி

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் செய்தி குறிப்பில், சமூக ஊடகங்களில் சட்ட ஒழுங்கை மீறும் பதிவுகள் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு செய்து வருகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும், பிரச்னைக்குரிய பதிவுகள், சாதிய ரீதியிலான பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருந்து வருவதால், இது போன்ற பதிவுகள் செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 108 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 3, 2025

ஆசிரியர் கூட்டணி செயற்குழுவுக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் மைக்கல் ஜார்ஜ் கமலேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 4ம் தேதி பகல் 11 மணிக்கு டக்கரம்மாள்புரம் மாவட்ட கட்டிடத்தில் நடைபெறும். மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். (அக்டோபர் 8) மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!