Tirunelveli

News October 5, 2025

நெல்லை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> .
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க

News October 5, 2025

நெல்லை: கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு

image

போக்குவரத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அக்டோபர் 7ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என நெல்லை நயினார் குளம் காய்கனி வியாபாரிகள் சங்க நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு 7ம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் காய்கறி கடைகளும் அடைந்து ஈடுபட போவதாக சங்கம் சார்பில் அறிவித்துள்ளனர்.

News October 5, 2025

நெல்லை: இலவச அரிசி, கோதுமை பெற APPLY..!

image

நெல்லை மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

News October 5, 2025

நெல்லை சந்திப்பில் வரதராஜ பெருமாள் வீதி உலா

image

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இரவு கருட சேவை வைபவம் நடைபெற்றது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளை உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News October 5, 2025

நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்…APPLY!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 5, 2025

நெல்லையில் அரசு பேருந்து மேன் மீது மோதி விபத்து

image

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் வழியாக சென்ற அரசு டவுன் பேருந்து ஒன்று இன்று இரவு திடீரென பிரேக் பிடிக்காமல் திணறியுள்ளது. அப்போது அந்த பேருந்தின் பின்புறமாக வந்த வேன் மீது லேசாக பேருந்து மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரியார்கள் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 5, 2025

நெல்லையில் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் போன்றவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக். 4) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2025

மாநகர காவல் துறை முக்கிய வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பொது மக்களின் அவ்வப்போது தங்களது இணையதள பக்கத்தின் மூலம் விழிப்புணர்வு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அக்டோபர் 4 சனிக்கிழமை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான வரைபடமும் பதிவிட்டுள்ளனர்.

News October 4, 2025

BREAKING: நெல்லை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாநகர வியாபாரிகள் சங்கம் அக்டோபர் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலும் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே என தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!