Tirunelveli

News March 10, 2025

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை முன்னீர் பள்ளம் அருகே வடுவூர் பட்டி டாஸ்மாக் அருகே சங்கர சுப்பிரமணியன் என்பவரை கொலை செய்த வழக்க்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மகாராஜன்(24), பாண்டி(38) மற்றும் சீதாராமன்(29) ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து  நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 10, 2025

மாணவனுக்கு 12 இடங்களில் அரிவாள் வெட்டு

image

ஸ்ரீவைகுண்டம் அருகே இன்று காலை பேருந்தில் வந்த +1 மாணவனுனை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறுகையில், பேருந்தில் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் வந்த மாணவனுக்கு 12 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 5 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்ஸிஜன் உருளை பொருத்தி கண்காணிப்பில் உள்ளார் என்றார்.

News March 10, 2025

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

image

பாளை கிறிஸ்துராஜா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பள்ளிக்கு பஸ்ஸில் வரும் போது முன்பகை காரணமாக மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2025

முன்னாள் ஊராட்சி தலைவர் விபத்தில் பலி

image

நெல்லை மாவட்டம், தளபதி சமுத்திரம் ஊராட்சியின் தலைவர் இருந்தவர் ராமசுப்பு. நேற்று(மார்ச்.9) இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மரணம் அடைந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசுப்பு உடலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News March 9, 2025

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ மழை பெய்யக் கூடும்.

News March 9, 2025

நெல்லை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 28 கோடி இழப்பீடு 

image

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் இந்த ஆண்டிற்கான முதலாவது தேசிய லோக் அதாலத் நேற்று பாளை நீதிமன்றத்தில் நடந்தது.லோக் அதாலத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 7,314 வழக்குகளில் 3,825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 28 கோடியே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி சாய் சரவணன் உத்தரவிட்டார்.

News March 9, 2025

நெல்லை: BSNL 4G துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி

image

நெல்லை வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தொலைபேசி ஆலோசனை குழு கூட்டம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் 4G சேவையை துரிதப்படுத்தவும் தொலைதொடர்பு சேவை மக்கள் அனைவருக்கும் தாமதமின்றி விரைவாக கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்தார்.

News March 9, 2025

நெல்லையில் மண் சுமப்பதே பரிகாரம் எங்கு தெரியுமா.?

image

நெல்லை, உவரி பகுதியில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு சிவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணத்தடை, பித்ரு தோஷம் போன்றவை நீங்குவதற்காக பக்தர்கள் கடற்கரை மண்ணை ஓலைப்பட்டியில் சுமந்து கொண்டு வந்து கொட்டி வழிபடுவது இங்கு விசேஷமாக இருக்கிறது. இந்த பரிகார முறை காலம் காலமாக நடைபெற்று வருகிறது. SHARE பண்ணுங்க

News March 9, 2025

யானை தந்தம் கடத்திய 5 பேர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில் யானை தந்தங்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.அவர் தனது கூட்டாளி நான்கு பேர் உதவியுடன் பலலட்ச ரூபாய் மதிப்புள்ள யானையின் பற்கள், யானை தந்தங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர்.

News March 8, 2025

தவெக கடிதத்தில் பிழையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தவெக கடிதத்தில் எழுத்துப்பிழை இருப்பதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வள்ளியூர் ஒன்றிய தவெக சார்பில் அச்சடிக்கப்பட்ட கடிதத்தில் “உயிர்கக்கும்” என பிழையாக உள்ளது. அதனை திருத்தாமல் கட்சி நிர்வாகிகள் அப்படியே பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர். இது இன்று (மார்ச்-8) வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!