India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல்.1 முதல் ஏப்ரல் 30 வரை “வாடிக்கையாளர் சேவை மாதம்” எனும் நிகழ்வை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சங்கரன்கோயில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 17.4.2025 அன்றுநடைபெறும். புதிய FTTH இணைப்பு சிம் கார்டுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார்.*ஷேர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் வரும் ஏப்.17 வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. நெல்லை மாநகர பகுதியில்
மத்திய அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிய நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. அரசு துறையில் ஓய்வு பெற்ற,
வங்கி அலுவலர்கள் இல்லத்தரசிகள்
கல்வி மற்றும் தனியார்த்துறை யில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி :SSLC, +2, Any Degree, தொடர்பு கொள்ளவும்: 73587 39939
நெல்லை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
தருவை பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் மீது நேற்று (ஏப்-14) ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என முன்னீர்ப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளை (ஏப்.15) கன்னியாகுமரியில் நடைபெறும் லொயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காலை 10 மணி அளவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாளை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மதியம் 2 மணி அளவில் கலந்து கொள்கிறார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று நெல்லை வந்த அவரை பொதுமக்கள் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. மாபெரும் வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து காணி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையிலுள்ள பனங்காட்டு ஓடை என்ற பகுதியில் குட்டிகளுடன் கூடிய சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நீர் அருந்தி ஓய்வெடுத்து சென்றன.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Sorry, no posts matched your criteria.