Tirunelveli

News March 13, 2025

மார்ச்.31க்குள் கைரேகை பதிவு செய்ய வலியுறுத்தல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏஏ ஒய் மற்றும் பி எச் எச் குடும்ப அட்டைதாரர்கள் அரசு வழங்கும் அனைத்து சிறப்பு சலுகைகள், நலத்திட்டங்களை தொடர்ச்சியாக பெறுவதற்கு குடும்ப அட்டைகள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். *ஷேர் பண்ணுங்க

News March 13, 2025

பணம் அனுப்பும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்: காவல்துறை

image

ஒருவரின் முகநூல்பக்கத்தில் உள்ள போட்டோக்களை திருடி அதே போன்று ஒரு முகநூல்பக்கம் உருவாக்கி, அதில் இருந்து friends request கொடுத்து FB A/Cல் ஒருவர் இணைந்ததும் அவரிடம் Facebook Messenger மூலம் அவசரமாக பணம் தேவைப்படுவதாக பணத்தை ஒரு மொபைல் எண்ணை கொடுத்து Gpay & phonepay போன்றவற்றில் செலுத்துமாறு கேட்கின்றனர். எனவே பணம் கேட்போரை நேரில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு காவல்துறை எச்சரிக்கை.

News March 13, 2025

நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.99.82 கோடி – எம்பி

image

நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.99.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் கிழக்கு ,மேற்கு வாயில்கள் கட்டடங்கள், பாலங்கள், நடைமேடைகள், பார்சல் சர்வீஸ் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளது. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது என்றார்.ஷேர் பண்ணுங்க

News March 13, 2025

நெல்லையில் 27,716 விவசாயிகள் அடையாள எண் பெற்றனர்

image

நெல்லை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் இதுவரை 27,716 விவசாயிகள் மட்டுமே மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு பதிவு செய்து விவசாயிகள் அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசின் மானியங்கள் அனைத்தும் பெற முடியும் என்றார்.

News March 13, 2025

பிறந்தநாளன்று மாணவன் மரணம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 2ம் ஆண்டு படித்த இன்பராஜ்(21), கதிர்(21), ஆகியோர் டூவீலரில் சென்றனர். மாவடி விலக்கு பகுதியில் வந்தபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்புறம் இருந்த இன்பராஜ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று அவரது பிறந்தநாள். படுகாயமடைந்த கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானூர் போலீஸ் விசாரணை.

News March 12, 2025

நெல்லை: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்12] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

நெல்லை: பிஷப் கால்டுவெல் வாழ்ந்த ஊர்

image

திசையன்விளை அருகே இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என கண்டுபிடித்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் இவரே. அயர்லாந்திருந்து தன்னுடைய 24வது வயதில் இந்தியா வந்து 50 ஆண்டுகள் தங்கியிருந்து மொழி குறித்து ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். SHARE IT

News March 12, 2025

நெல்லை: இன்னமும் திருமணம் ஆகவில்லையா? இங்க போங்க

image

நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*

News March 12, 2025

150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாளை கோபாலன் மஹாலில் இன்று நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜொலிந்தாள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை பாளை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் துவக்கி வைத்தார்.இதில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

News March 12, 2025

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

error: Content is protected !!