Tirunelveli

News October 27, 2024

அதிமுக கவுன்சிலருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் 

image

திசையன்விளை பேரூராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் விஷயத்தில் பணத்துக்காக இரண்டு முறை துரோகம் செய்த திசையன்விளை அதிமுக கவுன்சிலர் பிரதீஷ் குமாரை அடிப்படை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். அவரை நீக்காவிட்டால் வரும் தேர்தலில் அதிமுகவிற்கு எவ்வித பணிகளும் செய்ய மாட்டோம் என திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 27, 2024

நெல்லை மாவட்டத்தில் 173 மில்லி மீட்டர் மழை பதிவு

image

இன்று(அக்.27) காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் 173.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாலு முக்கு பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஊத்து 30, காக்காச்சி 27, பாபநாசம் 13, சேர்வலாறு அணை 11, கொடுமுடி ஆறு அணை 19, மாஞ்சோலை 19, சேரன்மகாதேவி 5, சேர்வலாறு அணை 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 95.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.84 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.70 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணை ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News October 27, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(அக்.26) குமரி, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News October 27, 2024

நெல்லை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்

image

தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் நவ. 3ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் சென்னை தாம்பரம் சேருகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் நவ.4ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை தென்காசி வழியாக நெல்லை வந்து சேர்வதாக தெற்கு ரயில்வே இன்று(அக்.27) அறிவித்துள்ளது. SHARE IT

News October 26, 2024

நெல்லையில் மாலை வரை பெய்த மழை விபரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.26) மாலை 4 மணி வரை பதிவான மழை நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேரன்மகாதேவி 3.80 மில்லி மீட்டர், நாங்குநேரி 2 மில்லி மீட்டர், அம்பை ஒரு மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக உள்ளது. சில இடங்களில் சாரல் மழை பெய்கிறது.

News October 26, 2024

தவெக மாநாட்டிற்கு செல்லும் நெல்லை தொகுதிக்கு 2000 பேர்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டுநெல்லை மாவட்ட தலைவர் சஜி தலைமையில் சுமார் தொகுதி வாரியாக 1500 முதல் 2000 வரை பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கஉள்ளனர். நெல்லையில் 5 தொகுதிகள் உள்ளது. மேலும் பொதுமக்களைபாதுகாப்பாக மாநாட்டிற்கு அழைத்து வரதமிழக அரசின் சட்ட நெறிமுறைகளை பின்பற்ற இருப்பதாக நெல்லை மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் சஜி தெரவித்துள்ளார்.

News October 26, 2024

SI உடலுக்கு SP, கலெக்டர் நேரில் அஞ்சலி

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சுப்பையா விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சுப்பையா உடல் சொந்த ஊரான வி.கே.புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், எஸ்பி சிலம்பரசன் இருவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

News October 26, 2024

நெல்லை கலெக்டருக்கு குவியும் பாராட்டு

image

நெல்லையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி காடுகளை அமைக்கும் முயற்சியில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் மாங்குரோவ் கன்றுகளை நட்டு காலநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தும் நெல்லை கலெக்டரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

News October 26, 2024

சிறப்பு வகுப்புகள் வேண்டாம்: நெல்லை கலெக்டர்

image

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(அக்.,25) பகல் முழுவதும் அவ்வபோது மிதமான மழை பெய்தது. குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து இன்றும்(அக்.,26) நெல்லையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் கலெக்டர் கார்த்திகேயன் தடை விதித்துள்ளார்.

error: Content is protected !!