Tirunelveli

News January 7, 2026

நெல்லை: வீடு வாடகை மோசடி – எஸ்.பி எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பு; நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 7, 2026

நெல்லை: வீடு வாடகை மோசடி – எஸ்.பி எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பு; நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 7, 2026

நெல்லை: வீடு வாடகை மோசடி – எஸ்.பி எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பு; நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 6, 2026

நெல்லை: பிரபல அரசு கல்லூரியின் முதல்வர் கைது

image

பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா (தற்போது கல்லூரி முதல்வர்) மீது கலெக்டரிடம் மாணவி புகார் அளித்தார். எனவே சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இன்று முதல்வர் சுமிதா மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவரது கணவர் பொன்னுதுரை ஆகிய இருவரை கைது செய்தனர்.

News January 6, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

News January 6, 2026

நெல்லை: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

image

திருநெல்வேலி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 6, 2026

நெல்லை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருநெல்வேலி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

நெல்லையில் ஒருவர் அடித்துக் கொலை

image

நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் மார்ட்டின் என்பவர் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

நெல்லை சத்துணவு மையத்தில் வேலை! 10th தகுதி போதும்…

image

நெல்லை மாவட்டத்தில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் ஜன.14க்குள் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 6, 2026

நெல்லை: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை, காந்திநகர், குன்னத்தூர், பேட்டை, அபிஷேகப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. SHARE

error: Content is protected !!