India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி புனித செல்வம் மாதா திருக்கோயில் 50வது வருட பொன்விழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மாபெரும் தேர் பவனி நடைபெற உள்ளது. தேர் பவனியை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு நேற்று(அக்.05) கேட்டுக் கொள்ளப்பட்டது.
சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 831 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகளையும் களக்காடு நகராட்சி மற்றும் பணகுடி, திசையன்விளை, வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிகளுக்கும் ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு இன்று(அக்.05) ஆய்வு செய்தார்.
வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி சிவராம் கலைக்கூடம் சார்பில் மாணவ மாணவிகள் பாளை சின்மயா பள்ளி எதிரே உள்ள வனத்துறை அலுவலக சுவரில் வண்ணம் தீட்டும் பணியில் இன்று(அக்.05) காலை ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வனவிலங்குகளின் அறிய தத்துவமான காட்சிகளை மாணவ மாணவிகள் ஓவியமாக வரைந்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கஸ்தூரி ரங்கபுரத்தில் நேற்று செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதால் 2 ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை அரசு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஆசிரியர்களுக்கு ஒருபோதும் சம்பளம் குறைபாடு இருக்காது என்றார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் வேறு மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லை எனில் இ-ஷ்ராம் https://esharam.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குலசேகரபட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நெல்லை வழியாக திருச்செந்தூர் மற்றும் குலசைக்கு செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து இன்று(அக்.,5) அதிகாலை முதல் குலசேகரப்பட்டினத்திற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. SHARE IT.
நெல்லை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலக தலைமை காவலர் முருகராஜ்(41), V.K.புதூர் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்மதி, மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றுகிறார் எனக்கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்து முருகராஜ் & வளர்மதியை கைது செய்துள்ளனர்.
பேட்டையில் கடந்த 2 ஆம் தேதி, இந்து முன்னணியினர் இந்துக்களின் உரிமையை மீட்க வேண்டும் எனக்கூறி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்துக்களின் நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாக கோஷமிட்டனர். இது தொடர்பாக போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட 6 பேர் மீது நேற்று(அக்.,4) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாமிரபரணி கழிவுநீர் தடுப்பது குறித்து மாநகராட்சியில் நேற்று(அக.,4) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேயர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அப்போது, மாநகராட்சி சார்பில் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் வடிகட்டும் அமைப்புகளை ஏற்படுத்தி கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் பணியை விரைவாக மேற்கொள்ள என கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் 24 மணி நேரமும் பல மாநில ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், பிளாட்பார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது 5 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 6 மற்றும் 7வது பிளாட்பாரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கு ஏற்கனவே செயல்பட்ட குட்செட் அறைகள் அகற்றப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.