Tirunelveli

News October 30, 2024

பாபநாசம் அணையில் 805 கன அடி நீர் திறப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று எங்கும் மழை பொழிவு இல்லாமல் வருண்ட வானிலை காணப்பட்டது. இதனிடையே, பாபநாசம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 805 கன அடி நீர் இன்று (அக்.30) திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 95 அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் வரத்து வினாடிக்கு 427 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 105 அடியாக உள்ளது.

News October 30, 2024

தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து மடல் வெளியிட்ட தலைவர்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தனது சிந்தனை மற்றும் செயல்பாடுகளை எப்போதும் சமூக நல்லிணக்கத்துடன் முன்னெடுத்துச் சென்றவர் முத்துராமலிங்கத் தேவர். அவர் முஸ்லிம்களுடனான பந்தமும் பாசமும் மிகவும் வலுவானது. ஒரு நல்ல சிந்தனையாளராக விளங்கிய அவரின் சிறந்த செயல்பாடுகளை இந்நாளில் நாம் நினைவு கூறுவோம் என தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

பிளஸ் டூ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; காவலர் கைது

image

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் கலைச்செல்வன்(35). ஏர்வாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவர் தற்போது காலை கேடிசி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு 17 வயது பிளஸ் 2 மாணவியிடம் பேசி பழகி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் நேற்று ஆனந்த் செல்வனை போலீசார் கைது செய்தனர்.

News October 30, 2024

தரமற்ற பொருட்கள் குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.29) வெளியிட்ட அறிக்கையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் மக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கும் உணவுப் பொருட்கள் தரம் இல்லை என்றால் 94440-42322 என்ற WhatsApp எண்ணில் புகார் அளிக்கலாம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News October 30, 2024

நெல்லை வாக்குச்சாவடிகள் விவரம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,490 வாக்குச்சாவடிகள் உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகள் உள்ளன. நெல்லை 311, நாங்குநேரி 306, அம்பை 294, பாளையங்கோட்டை 270 வாக்குச்சாவடிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

நெல்லை தென்காசியில் 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை தொழிலாளர் உதவியாளர் முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக். மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் & பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பட்டாசு கடைகள் உட்பட அனைத்து கடைகள் 74 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 43 நிறுவனங்கள் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

News October 30, 2024

நெல்லை மாவட்டத்தில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.30) நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம் வருமாறு: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா ஊஞ்சல் விழா ஊஞ்சல் மண்டபத்தில் இன்று இரவு 6 மணிக்கு நடக்கிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் அமைப்பினர் காலை 9 மணி முதல் மாலை அணிவிக்கின்றனர். கீழ சேவல் சமுதாய நலக்கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம் நடக்கிறது.

News October 30, 2024

தீபாவளி அன்று மழை உண்டா? முக்கிய தகவல்

image

நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று விடுத்துள்ள வானிலைப் பதிவின் விபரம்: “ நாளை தீபாவளி அன்று தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பதிவுக்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் 1ம் தேதிக்கு பின்னர் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று வீசும். இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் குறிப்பாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வலுப்பெற வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்

News October 30, 2024

கூடங்குளத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் நேற்று அவரது வீட்டின் பின்புறம் கீழே கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது அண்ணன் முருகன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 30, 2024

நெல்லை வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு நெல்லை வழியாக இரவு 9.55க்கு தாம்பரம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!