Tirunelveli

News October 9, 2024

கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்

image

நெல்லை மாவட்ட கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று(அக்.08) நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாரம் ஒருமுறை சென்று மாணவிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 9, 2024

நெல்லை கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஊழியர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி அதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (அக்.9) கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும் என அதன் மாவட்ட தலைவர் வட்டாட்சியர் சுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

News October 9, 2024

நெல்லை மகளிர் நிர்வாகிக்கு பொறுப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக திமுக மகளிர் தொண்டரணி மாநில துணை செயலாளரும் திருநெல்வேலியை சார்ந்தவருமான விஜிலா சத்யானந்த் இன்று (அக்.08) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜிலா சத்யானந்துக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 9, 2024

திமுக அரசை குற்றம் சாட்டிய நெல்லை முபாரக்

image

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்‌. இந்த நிலையில் இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழிலாளர்களை கசக்கி பிழியும் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் திமுக அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.

News October 8, 2024

தமிழ் தொண்டர்கள் உதவி தொகை பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: முதுமை காலத்திலும் பொருள் வறுமை எதிர்கொள்வதற்காக தமிழ் தொண்டர்களுக்கு மாதம் ரூ. 3500, மருத்துவத்திற்கு 500 என 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ் பணி ஆற்றிய விவரங்கள், பரிந்துரை சான்றிதழ், ஆதார் குடும்ப அட்டை ஆகிய நகல்களுடன் 58 வயது நிறைவடைந்தவர்கள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெறலாம்.

News October 8, 2024

நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது.14 புதிய முதலீட்டு திட்டங்களுக்காக ரூ.38,698 கோடி முதலீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட இளைஞர்கள் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

News October 8, 2024

நெல்லை பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமனம்

image

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி பணி பொறுப்பு அமைச்சராக கே.என் நேரு இன்று(அக்.,8) நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நெல்லை சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2024

நெல்லை தொகுதி திமுக பொறுப்பாளருக்கு பாராட்டு

image

நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் திமுக பொறுப்பாளராக சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏவும், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான முத்து செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திமுக பொறுப்பாளருக்கு நெல்லை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகளை திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2024

14 பேர் வீடியோ காலில் ஆஜர்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் தீபக் ராஜன். இவரை வெட்டிக் கொன்ற வழக்கு நெல்லை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கால் மூலம் விசாரணை நடைபெற்றது. இதில் 14 பேர் ஆஜரான நிலையில் ஆஜராகாத நான்கு பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.

News October 8, 2024

அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 25,000 பேர் வருகை

image

பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே உள்ள காது கேளாதார் பள்ளி மைதானத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 25 ஆயிரம் பேர் வருகை தந்துதுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நவம்பர் 11 வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. நீங்க பொருட்காட்சி பார்த்த அனுபவம் உண்டா? SHARE IT.

error: Content is protected !!