India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 மாத தேவைக்கான ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.15) தெரிவித்துள்ளார்.
சேரன்மகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்கைக்குட்பட்ட முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இன்று (அக்.15) ஒருவர் தண்ணீரில் மூழ்கி விட்டதாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து சேரன்மகாதேவி கூடுதல் பொறுப்பு அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மூழ்கி இறந்த வாலிபர் உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாவீரர் மருதநாயகம் கான்சாகிப் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு சீர்மிகு நிர்வாகத்தை தந்து வளம் கொழிக்கும் நல்லாட்சி வித்திட்ட மாவீரன் மருதநாயகம் கான்சாகிப்பை நினைவு கூறுவோம் என புகழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு அதன் பலகை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி, மாநகராட்சி, மின்சாரம், குடும்ப அட்டை, மகளிர் பேரிடர் உதவி, முதல்வரின் முகவரி என தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் நாராயணனை திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இவர் விரைவில் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனர் பதவி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத டுடோரியல் கல்லூரி, டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், வர்த்தக நோக்கில் நடத்தப்படும் ஆங்கில மீடியம் பிரைமரி, நர்சரி பள்ளி உள்ளிட்ட 14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 பயனாளிகள் பயன்பெறுவர் என்றார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் இன்று(அக்.,15) மாலை முதல் நாளை நள்ளிரவு வரை மிக அதிகமாக காணப்படும். ஒவ்வொரு அலையும் 18 – 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 – 2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவது குறித்து ஒவ்வொரு மாதமும் 2 ஆவது சனிக்கிழமை நெல்லை மாவட்ட, வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சூறைகாற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்சாதனங்கள், மரங்கள் அருகிலேயோ அல்லது அதற்கு கிழோ பொதுமக்கள் நிற்க வேண்டாம். மேலும், மின்சாரம் சம்பந்தமான சேவைக்கு, மின்தடை நீக்கும் மைய எண்களான 94987 94987, 94458 59032, 94458 59033 & மின் நுகர்வோர் சேவை மைய எண் 94458 59034 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
நெல்லை கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ராமசாமி(24). இவரது நண்பரான தங்க மாரியப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அதேபகுதியில் உள்ள அம்மன் கோயிலில் தசரா விழா நடத்தியுள்ளனர். நேற்று(அக்.,14) மாலையில் வசூலான பணம் குறித்து ஒரு பிரிவினர் கணக்கு கேட்கவே, அப்போது ஏற்பட்ட தகராறில் ராமசாமி, தங்க மாரியப்பன் ஆகியோரை 5 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.