Tirunelveli

News January 15, 2026

நெல்லை மாநகரில் 600 போலீசார் குவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக 600 போலீசார் நெல்லை மாநகர பகுதிகளில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

News January 14, 2026

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன.14) இரவு உட்கோட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சிவந்திப்பட்டி ராபர்ட், மூலக்கரைப்பட்டி சுகாதேவி, உவரி உமா, பத்தமடை ஜோதிலட்சுமி, அம்பாசமுத்திரம் சண்முக வேல் ஆகியோர் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

News January 14, 2026

நெல்லை: ரூ.1,77,500 சம்பளத்தில் ராணுவத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

நெல்லை: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

நெல்லை: சோதனையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி

image

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பொங்கல் பாதுகாப்பை முன்னிட்டு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அமீர், பாலா ஆகிய இருவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடமும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News January 14, 2026

நெல்லை: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

நெல்லை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 14, 2026

நெல்லை: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

நெல்லை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 14, 2026

நெல்லை: கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்தால் ஒருவர் பலி

image

நெல்லை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமசிவன்(25), டவுனை சேர்ந்த ராஜ கல்யாணி(31) உள்ளிட்டோர் ஒரு குழுவாக நேற்று மாலை திருச்செந்தூருக்கு பாதையாத்திரை சென்றுள்ளனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் இவர்கள் சென்ற போது நெல்லை – திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து பாதையாத்திரை கூட்டத்துக்குள் புகுந்ததில் பொன்பரமசிவன் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

பாளை மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு

image

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அவ்வப்போது மாநகர போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் படி ஒவ்வொரு அறையாக போலீஸ் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வால் சிறை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

error: Content is protected !!