India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். *ஷேர்*
நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த மாதம் ஐ.டி. ஊழியர் கவின் கொலை தொடர்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ராம நாராயண பெருமாள் என்பவர் அந்த பகுதிக்குட்பட்ட சங்கனாபுரம் விவசாய கிணற்றில் இன்று தவறி விழுந்துள்ளார். இதுக்குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த நபரை பத்திரமாக மீட்டனர்.
நாக்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்தர்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கபடும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது www.bcmbcw.tn.gov.in இணையதளத்தில் பெற்று, நவம்பர் 30-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த சொகுசு நகர பேருந்துகள், மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்தாக மாற்றி இயக்கபட்டு வருகிறது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டல மேலாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்: திருநெல்வேலியில் வருகின்ற அடுத்த 15 நாட்களுக்கு பொதுமக்கள் அனுமதியின்றி கூடுதல் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பாக இந்த உத்தரவானது நாளை (ஆகஸ்.06) முதல் வருகின்ற (ஆகஸ்.20) வரை அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில், இந்திரா காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சந்தன குமார், மீன் பிடிக்க சென்றபோது ஊரா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.