India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மத்திய கருவிகளுக்கான மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் இரண்டு பேரும் திட்ட உதவியாளர்களும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுடன் இணையத்தில் வெளியிட்டுள்ள சான்றுகளுடன் வருகின்ற 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஷேர்!

நெல்லை, மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் நேற்று முன்தினம் திடீரென தனது தந்தை முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு தற்போது வரை 21,177.92 மெ.டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மழையால் அம்பை பாளை மானூர் பகுதியில் நெல் பயிர் சேதமடைந்துள்ளதால் 80-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சேத விபர அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. வார்டு உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெறும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று முக்கிய கோரிக்கைகள் தேர்வு செய்யலாம் உங்கள் பகுதியில் நடைபெறும் கூட்ட இடம் விபரத்தை வார்டு உறுப்பினரிடம் தெரிந்து கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. வார்டு உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெறும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று முக்கிய கோரிக்கைகள் தேர்வு செய்யலாம் உங்கள் பகுதியில் நடைபெறும் கூட்ட இடம் விபரத்தை வார்டு உறுப்பினரிடம் தெரிந்து கொள்ளலாம்.

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
Sorry, no posts matched your criteria.