Tirunelveli

News April 9, 2025

நெல்லை – சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வலியுறுத்தல்

image

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு தற்போது ஒரு ரயில் மட்டுமே 1994 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். பலர் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வழிதடத்தில் இரண்டாவது விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

News April 9, 2025

போலி கிப்லி தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

சமூக ஊடகங்களில் தற்போது Ghibli-பாணி படங்கள், உருவாக்குவதே ட்ரெண்ட்டாக உள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை கார்டூன் போல் மாற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 9, 2025

போலி கிப்லி தளம்: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் புகைப்படத்தை கார்டூன் போல் மற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News April 8, 2025

ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற குழந்தைகள் நல குழுவினர்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அவர்களை இன்று (08.04.2025) சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 8, 2025

இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

நெல்லை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணபிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த விருது தொடர்பாக தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வரை உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

நெல்லை: நோய் தீர்க்கும் ஆலயம்

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராகு பகவானுக்கு செய்யப்படும் எல்லா அபிஷேகங்களையும் பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாவே செய்கின்றனர். இங்குள்ள அம்மனுக்கு பொங்கல் நெய் வைத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் வேண்டினால் விபத்து, மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். *ஷேர் பண்ணனுங்க*

News April 8, 2025

இ எஸ் ஐ குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு

image

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 8, 2025

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை நெல்லை மாவட்டத்தில் 15.04.25 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பயிற்சி பெற்ற கல்வி நிறுவன தேர்ச்சி சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் ஆதாருடன் பங்கேற்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

நெல்லையில் உருவாகும் பாகுபலி 

image

பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் பாகுபலி பொருட்காட்சி இந்த மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது.கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் விடுமுறையை சந்தோஷமாக கழிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த பொருட்காட்சி அமையும் என்பதால் நெல்லை பகுதி மக்களுக்கு மிகவும் இது ஒரு வரப் பிரசாதம் ஆகும். இந்த பாகுபலி பொருட்காட்சியில் பிரம்மாண்டமான அரங்குகளும் கோட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

News April 8, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று(ஏப்.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜித் குமார் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!