India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகர எல்லை பகுதியில் இன்று (மார்ச்.29) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று (மார்ச்.29) வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்ஸ்டாகிராமில் பண மோசடி நடைபெறுகிறது.எனவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமில்லாத நபர்களிடம் ஆன்லைனில் மொபைல் துணி போன்றவற்றை ஆர்டர் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்புக்கான தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று (மார்ச்.29) பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதி விண்ணப்பம் திறக்கப்படும்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் காரையாறு வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த யானையை பரிசோதனைக்கு உட்படுத்தி இறப்பை உறுதி செய்தனர். சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானையின் கொம்பால் குத்தப்பட்டதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் சார்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ. 74.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட மறுசீரமைப்பு பணிக்கு அனுபவம் வாய்ந்த ஏஜென்சிகள் & நிறுவனங்களிடமிருந்து இ- டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றது. www.eprocure, gov.in/eprocure/cppp – ல் டெண்டர் ID:2025_NCSM_853930_1 ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து டெண்டரை ஆன்லைனில் பதிவேற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று (மார்ச்-28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு ரூ-25 லட்சம், ஆடுபண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை, பன்றி வளர்க்க 15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது .இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் இங்கே <
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் 5-ஆம் தேதி துவங்கி ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது சுற்று போட்டிகள் திருநெல்வேலியில் ஜூன் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 7 போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (62) அதே ஊரில் வசித்த அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். துக்க வீட்டிற்கு சென்று அவர் நேற்று (மார்ச்.28) அங்குள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை அவரது உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.28] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிகுமார் ஆவுடையப்பன் ஆகியோர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பில் B.Ed, B.Sc, M.Ed, M.Sc, MA, MSW, PhD படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10-04-2025. தகுதியான நபர்களுக்கு ரூ.21,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்க இங்கே <
*வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணவும்*
Sorry, no posts matched your criteria.