India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் தீர்ப்பதற்கு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் திட்டம் வரும் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அதில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுத்த நடவடிக்கைகளை குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று(நவ.18) முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். நடிகர் விஜய் தர்மபுரியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சி தலைமை வெளியிடவில்லை என்றார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.18) காலை 7 மணி வரை பதிவான மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பாசமுத்திரம் 8 மிமீ , பாபநாசம் 7 மில்லி மீட்டர், நாங்குநேரி 4 மில்லி மீட்டர், சேர்வலாறு 14 மில்லி மீட்டர் களக்காடு, கன்னடியன் அணை பகுதியில் தலா 7.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் 70 பேர் மாநகர காவல் பகுதியிலும், 192 பேர் மாவட்ட காவல் பகுதியிலும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயில்களில் படியில் நின்றும் தண்டவாளங்களில் நின்றும் ரயில் பெட்டியில் ஏறி நின்று உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் வீடியோ எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சமூக ஊடகங்களில் பிரபலமாக ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், அப்போது ஏற்பட்ட சச்சரவில் கூட்டத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேறினர். இதை தொடர்ந்து நேற்று(நவ.,17) இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ் உள்ளிட்ட 30 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்.
நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,18)காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணி முதல், 9,10ஆம் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பாளை கிறிஸ்துராஜா பள்ளியில் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு வ.உ.சி குருபூஜையை ஒட்டி நெல்லை மணி மண்டபத்தில் கலெக்டர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,18) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நெல்லை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.
அமைச்சர் மா சுப்பிரமணியன் நெல்லையில் இன்று (நவ. 17) செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் 1,353 மருத்துவர் காலிப்பணியிடம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை ஏற்படும் காலிப் பணியிடங்களையும் சேர்த்து 2,553 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். இதுபோல் 2,250 செவிலியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
Sorry, no posts matched your criteria.