Tirunelveli

News November 21, 2024

மாவட்டத்தில் 50.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (நவம்பர் 21) மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 13 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 8 மில்லி மீட்டரும் மொத்தத்தில் 50.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News November 21, 2024

மோசடி டிரேடிங் கும்பலிடம் ரூ.60 லட்சம் இழந்த வாலிபர்

image

நெல்லையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் ஆர்வம் மிகுதியால் அதற்கான whatsapp குழு ஒன்றில் இணைந்துள்ளார். அது போரக்ஸ் டிரேடிங் என நினைத்து தனது சேமிப்பு பணம் 60 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். பணத்தைத் திரும்ப பெற முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து நெல்லை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2024

சீர் மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாம் நவ.22 அன்று நான்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நவ.26 அன்று அம்பை வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் இன்று(நவ.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.

News November 21, 2024

நெல்லையில் 214 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்பையில் 14.80 மில்லிமீட்டர், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டர் பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டர் களக்காட்டில் 8.80 மில்லி மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 20 மி.மீட்டர் என கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் 214 மில்லிமீட்டர் மழை பதிவாக இருப்பதாக தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது.

News November 21, 2024

ஜெயக்குமார் வழக்கில் 3 பேரிடம் விசாரணை: செல்வ பெருந்தகை

image

நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் செல்வ பெருந்தகை கூறுகையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை முடிந்த நிலையில் குற்ற புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தி வருகிறது. தொழில் நுட்ப விசாரணையும், அறிவியல் பூர்வ விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் அடையாளம் காணப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

News November 21, 2024

பொருநை அருங்காட்சியகப் பணி: செல்வ பெருந்தகை உறுதி

image

முதலமைச்சர் அறிவித்தபடி, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வருகிற மார்ச் மாதத்திற்குள் பணி நிறைவு பெறும் என அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக நேற்று நெல்லை வந்த பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லை – குமரி சாலையில் இது சுற்றுலா மையமாக மாறும்.

News November 21, 2024

திருநெல்வேலியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்வது நல்லது. SHARE IT.

News November 21, 2024

பொருநை நெல்லை திருவிழா – ஆட்சியர் தகவல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை நெல்லை திருவிழா 2025  நடைபெற உள்ளது. இதில் பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவற்றில் பங்கேற்க விரும்புவோர் நாளை முதல் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் தமது பெயர் விவரத்தை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

போலீயான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சி ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்தி வெளியிட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த அறிவிப்பு பேரிடர் மேலாண்மை பிரிவு மூலம் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!