India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.27) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொட்டால் உயிரிழப்புகள் ஏற்படும். அதனை தவிர்ப்பதற்கு கீழே கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்: இன்று(நவ.27) காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. வடக்கன்குளம் பாலகிருஷ்ணா எஸ்ஏவி பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் பிரபல சாலை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ் முருகன். இவர் தற்போது பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வசித்து வருகிறார். இன்று இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நெல்லை வருமான வரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகர்பகுதியில் அவரது மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
நெல்லையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக , இன்று 26.11.2024 முதல் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் துறை உதவி இயக்குனர் ராதாபுரம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து குறைகளைப் பதிவு செய்ய எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 28.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
திருநெல்வேலி மாநகர போலீசார் இன்று இணையவழி குற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், தற்போது நவீன காலத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகிறது. அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி குறித்தும், சைபர் கிரைம் இலவச எண்:1930 அழைக்கவும் மேலும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும் என தெரிவித்தனர்.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அரசமைப்பு நாள் உறுதிமொழி இன்று(நவ.26) காலை 11 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு அரசு அமைப்பு நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்படுகிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
#இன்று(நவ.,26) காலை 10,30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு விவசாயிகள் தொழிற்சங்க கூட இணைந்து வண்ணாரப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #காலை 7 மணி முதல் என்சிசி மாணவ மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாம் ஜான் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கும் பகுதி அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிப்பட்டு, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(நவ.,26) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHA
Sorry, no posts matched your criteria.