India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் செயல் அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கோவில் பகுதியில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவில்லை, வரவு, செலவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி பிரியதர்ஷினி இன்று அவரை பணியிட நீக்கம் செய்துள்ளார்.

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக SI வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வழக்கை மனித உரிமை ஆனையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மாநில் டிஜிபி மற்றும் நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு கீழ் பாளையகோட்டை அண்ணா விளையாட்டு கக்கன் நகர் அருகே உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 908088 65 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட பாபநாசம் கோவில் அருகில் உள்ள வாகன காப்பகம், கட்டண கழிப்பிடம் மற்றும் தள்ளு வண்டிகளில் கட்டணம் வசூல் செய்யும் பணிக்கு ஏப்ரல்.16 அன்று ஏலம் நடைபெற உள்ளது. வி.கே.புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல்.15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வி.கே.புரம் நகராட்சி ஆணையாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை அடுத்த ரெட்டியார்பட்டி அருகே நேற்று மாலை நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகு இப்பணிகளை மேற்பார்வை செய்வார்.

அரசு பஸ் பாஸ் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 31-03-2025 வரை செல்லத்தக்க பாஸ்களை 30-06-2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துமாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம். நாளை மறுநாள் நடைபெறவிருந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் & பழங்குடியினர் மாநில ஆணைய ஆய்வுக் கூட்டத்தில் மாநில ஆணைய தமிழ்வாணன் பங்கேற்று தீண்டாமை இல்லாத கிராமத்திற்கு ரூ.10 லட்சம் நிதியை வன்னிகோணேந்தல், முதுமொத்தன்மொழி கிராமங்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சுகுமார் முன்னிலை வகித்தார். நெல்லையில் தொடர் சாதிய பிரச்சனை இருந்து வரும் நிலையில் 2 கிராமங்கள் தீண்டாமையின்மை கடைபிடிப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று (மார்ச்24) போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பத்து பேர் சிக்கினர். நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நூர்நிஷா இன்று சரணடைவதாக தகவல் வந்ததை அடுத்து நீதிமன்றத்தில் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். இதில் சந்தேகத்தின் பேரில்10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.