India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து நவ.14 இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் விரைவு ரெயில் (16788), கரூர், திண்டுக்கல் வழியாக மாற்று பாதையில் நெல்லை வரும். திருச்சி சந்திப்பு ரெயில் நிலையம் செல்லாது. காச்சிகுடாவில் இருந்து நவ.17 மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாரந்திர ரெயில் (16353), கரூர், திண்டுக்கல் வழியாக செல்லும்.
நெல்லை தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆற்றின் தற்போதைய நிலை குறித்து உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் புகழேந்தி, சாமிநாதன் ஆகிய இருவர் இன்னும் சற்று நேரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆய்வு நடத்துகின்றனர். இதையொட்டி நெல்லை சுற்றுலா மாளிகையில் மாநகராட்சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தற்போது வருகை தந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று(நவ.,10) தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்கும் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர். இதற்கான பயணத்திட்ட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து துவங்கி மாநகரப் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு செல்லும் இடங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய குணச்சத்திர நடிகரான டெல்லி கணேஷ் நேற்று(நவ.,10) இரவு 11 மணியளவில் காலமானார். 1944 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெல்லை அருகே உள்ள வல்லநாட்டில் பிறந்தார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் 1994-ல் கலைமாமணி விருது பெற்றார். நெல்லை மைந்தனாகிய டெல்லி கணேஷ் உயிரிழந்ததை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் நெல்லையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை விமான நிலையத்தில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதேபோல் துணை மேயர் கே.ஆர்.ராஜு, பாளை., எம்எல்ஏ அப்துல் வஹாப், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் ஆகியோரும் முதல்வரை வரவேற்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க (CITU) நிர்வாகக் குழு கூட்டம் நெல்லை மாவட்ட குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஞானாம்பாள் சங்கத்தில் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க கோரி நவ.14ல் மாநிலம் முழுவதும் வட்டார வாரியாக மனித சங்கிலி மனித சங்கிலி இயக்கம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வரும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவுக்கு கலந்து கொண்டு நேற்று(நவ.,9) பேசியபோது, தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி துறையை உருவாக்கப்பட்டது. உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும் சிறு பிரச்னை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பெண்களுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.9) நடைபெற்றது. ஹாக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், இணைச்செயலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இன்று தாமிரபரணி ஆற்றை மாநகர பகுதியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் 10 பாய்ண்டுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். தாமிரபரணி ஆறு மட்டுமின்றி பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான வழித்தட நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ. 9) காவலர்களின் பெயர், அவர்களின் தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய அட்டவணையை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.