India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அந்தப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பஸ் ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தளங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமான தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:16352) வருகிற டிசம்பர் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆன்லைன் லோன் மோசடி நடைபெறுவதால் உங்கள் போனில் உள்ள whatsapp privacysettings ஐ மாற்றி கொண்டும், சமூக வலைதளங்களில் வரும்அங்கீகரிக்கப்படாத LOAN APP களில் loan எடுப்பதை தவிர்க்க வேண்டும். மோசடி நடைபெற்றால் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நெல்லை தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த சக்திவேல்முருகனை கடந்த 2017ல் முன்விரோதம் காரணமாக விஜய், விகாஷ், ரகுபதி, பார்த்திபன், கண்ணன், மகாராணி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் கொலை செய்தனர். இந்த வழக்கில் நெல்லை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிபதி இன்று விகாஷ், ரகுபதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை பார்த்திபன், கண்ணன், மகாராணி, விஜய் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நெல்லை இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வண்ணாரப்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா டிச.7 அன்று நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வங்கிகள், கொரியர் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகளின் ஆடியோ, வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதாக அச்சுறுத்துவார்கள் அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய சொல்வார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் உலகநாதன்(40). இவர் இன்று அரிகேசநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை சரமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை பகுதியை சேர்ந்த விஜயகுமார்(25) என்பவர் பாளையில் உள்ள தனது காதலியை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார். கைதான புஷ்பராஜ் சிம்சன் போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில், என் தங்கை மீதான காதலை கைவிட மறுத்ததால் அவரை ஊருக்கு வரவழைத்து வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று கூறுகையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணப்படும் தயக்கத்தையும் அறியாமையையும் அகற்ற ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் முழுமையான எச்ஐவி சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சேவையால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.