India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாள்தோறும் மாவட்ட முழுவதும் பதிவாகும் மழை அளவு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(டிச.06) காலை 8 மணி முதல் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் சேரன்மகாதேவி பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை, அம்பாசமுத்திரத்தில் மூன்று மில்லி மீட்டர் மழை, கன்னடியின் கால்வாயில் 3 மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நாளை(டிச.07) கல்லிடைக்குறிச்சி எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்கின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் சங்க அலுவலகத்தில் வைத்து வரும் 19ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செயலாளர் கோவில் மணி இன்று தெரிவித்துள்ளார்.
இன்று(டிச.06) பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஆயிரம் போலீசாரும் மாவட்ட பகுதியில் ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாநில அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேரில் அழைத்து பாராட்டி பரிசு சான்றிதழ்கள் வழங்கினார். சாதனை படைத்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், வீரதீர செயல் செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 இல் மாநில அரசு விருது வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற தளத்தில் டிச.25க்குள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்தபோது பக்ரைன் நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி நெல்லை மீனவர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக இன்று எம்.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நேற்று லோடு ஆட்டோ டிரைவர் உலகநாதன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் உலகநாதன் கொலை வழக்கில் முருகேசன், வாஞ்சிநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனத்தை இயக்கம் முன்பு வாகனத்தில் பிரேக், கண்ணாடி, டயர் காற்று, விளக்கு, எரிபொருள் ஆகியவற்றை சரிபார்த்த பின்பு இயங்குவது நல்லது .இதன் மூலம் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் விபத்துக்கள் தவிர்க்க முடியும். இதை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் காணப்படும் அதிக கூட்டத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே 3 பொது பெட்டியுடன் இயங்கி வரும் நெல்லை & பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு முன்பதிவற்ற பொதுப்பெட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.