Tirunelveli

News April 29, 2025

நெல்லை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்கள்

image

நெல்லை மாவட்ட மக்களே மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளவும்.
▶️அம்பாசமுத்திரம் – 7402608463
▶️ களக்காடு – 7402608482
▶️சேரன்மகாதேவி – 7402608467
▶️மானூர் – 7402608448
▶️நாங்குநேரி – 7402608478
▶️பாளையங்கோட்டை – 7402608444
▶️பாப்பாக்குடி – 7402608471
▶️இராதாபுரம் – 7402608488
▶️வள்ளியூர் – 7402608485
இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 29, 2025

நெல்லையில் 29 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஜாதி ரீதியாக கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாநகரப் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 29, 2025

18 துணை தாசில்தார்களுக்கு திடீர் ட்ரான்ஸ்பர்

image

நெல்லை மாவட்டத்தில் நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் சந்திரசேகர் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை துணை தாசில்தார் முத்துலட்சுமி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் 18 பேர் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News April 29, 2025

நெல்லை: தலை நசுங்கி வாலிபர் பலி

image

திசையன்விளையை சேர்ந்த செந்தில் முருகனின் மகன் சந்தோஷ்(14). பரப்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு சந்தோஷ் பைக்கில் பரப்பாடியில் இருந்து நாங்குநேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக்கில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரமானது சந்தோஷ் தலை மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை.

News April 28, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகரில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை இரவு நேரத்தில் உதவி ஆணையர்கள் தலைமையில் இரவு நேரத்தில் ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி சந்திப்பு பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்கள் வாரியாக காவல் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

News April 28, 2025

நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.

News April 28, 2025

மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

News April 28, 2025

நெல்லை மாவட்டம் மழை நிலவரம் வெளியானது

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழை பதிவான நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மி.மீ. மழையும் நம்பியார் அணை பகுதியில் 6 மி.மீ. மழையும் பாபநாசத்தில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

News April 28, 2025

நெல்லை: ரயில்வேயில் உடனடி வேலை

image

திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 28, 2025

BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

image

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!