Tirunelveli

News December 27, 2024

நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி பெருமாள்புரம் சிதம்பரம் நகரில் நடைபெற உள்ளது. இதில் வாராந்திர மாதிரி தேர்வு மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு 0462-2902248 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

வள்ளியூரில் ரூ 10,000 மதிப்புள்ள ஆடு திருட்டு

image

வள்ளியூரை சேர்ந்தவர் சுடலை கண்ணு மனைவி மணிபாலா (46). இவர் வீட்டிற்கு முன்புறம் உள்ள  இடத்தில் 10 ஆடுகளை கட்டி வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆடுகளுக்கு இழை தழைகளை வைக்க சென்றபோது ஒரு ஆடு மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் இன்று (டிச.27) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 27, 2024

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் விவரங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(டிச.27) அதிகாலை பெய்த மழையின் விவரம் பின்வருமாறு: அம்பாசமுத்திரம் – 7.20 மி.மீ, மணிமுத்தாறு -1.20 மி.மீ, திருநெல்வேலி – 2.00 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு – 1.00 மி.மீ, மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. சாரல் மழை பெய்த இடங்களில் முழுவதுமான விவரங்கள் அறிய முடியவில்லை.

News December 27, 2024

ரூ.3 லட்சம் வரையிலான அரசு தொழிற்கடன் – ஆட்சியர் 

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிச.26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் செயல்படும் இந்த திட்டத்தில் 25 வகையான தொழிற்கடன் வழங்கப்படும். கடன்களுக்கு 25% மானியம் & 5 % வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரையிலான கடன் வழங்கவும், ஆண்டுதோறும் 10000 கைவினை கலைஞர்களுக்கு இந்த திட்டத்தின் படி தொழிற்கடன் வழங்கப்படுகிறது. *ஷேர் செய்யவும்*

News December 27, 2024

நெல்லையில் TNPSC தோ்வுக்கான இலவச பயிற்சி – ஆட்சியா்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் 2025ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளது. இந்த தோ்வுக்காக, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஜன.2 ஆம் தேதி முதல் காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும். வாரந்தோறும் முழு மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். தோ்வுக்குரிய புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் உள்ளன*ஷேர்*

News December 26, 2024

போட்டி தேர்வர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அடுத்த ஆண்டு நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி நடைபெற உள்ளது. திறன் பெற்ற ஆசிரியர்கள், பயிற்சி அளிப்பார்கள், விருப்பமுள்ள மாணவர்கள் பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு அணுகலாம் என கூறியுள்ளார்.

News December 26, 2024

கிராம சாலைகளை சீரமைக்க ரூ.150 கோடி நிதி

image

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கிராம சாலைகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ரூ.150 கோடி நிதி ஒதுக்கி சேதமடைந்த கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இன்று நடைபெற்ற நெல்லை மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News December 26, 2024

உழவர் சந்தை உழவர்களுக்கு தர சான்று வினியோகம்

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் உழவர் சந்தையில் வேளாண்மை துணை இயக்குனர், பூவண்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண்மை துணை இயக்குனர் மேலப்பாளையம் உழவர் சந்தை விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் (FSSAI Certificat) வழங்கினார். நிகழ்வின் போது சந்தை நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான், உதவி நிர்வாக அலுவலர் ஜெயபாரதி மற்றும் உழவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

News December 26, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவி 

image

நெல்லை மாவட்ட விவசாயிகள் உற்பத்தி திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்க அரசு தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் வழங்குகிறது. சிறு குறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை (9025732083)தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்

News December 26, 2024

1313 மெட்ரிக் டன் யூரியா நெல்லை வருகை

image

பிசானப்பருவ சாகுபடிக்காக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 350 மெட்ரிக் டன்னும் தென்காசி மாவட்டத்திற்கு 583, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 155, குமரி மாவட்டத்திற்கு 185 மெட்ரிக்டன்னும் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த உரம் கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அவசர தேவைக்காக 80 டன் திருநெல்வேலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!