India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரயில்வேயில் பல ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன. இதன்படி நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் எண் 6673 லிருந்து 56728 ஆகவும் 6675லிருந்து 56729 ஆகவும் 6677லிருந்து 56733 ஆகவும் மாறுகிறது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 6405ல் இருந்து 56727 ஆகவும் 6676 ரயில் 56730 ஆகவும் 6678 ரயில் 56734 மாறுகிறது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம், டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க டிச.,5ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிச.,10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்டர் கேஜ் பாதையில் தென்காசி வழியாக சென்ற நெல்லை-கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து பாண்டியராஜா மற்றும் நிர்வாகிகள் தென்னக ரயில்வே அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட1048 திமுகவினரை கௌரவிக்கும் விழா வருகிற 12ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நெல்லை டவுன் கண்ணன் சாலையில் நடக்கிறது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய“எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து, நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் வெட்டுப்பட்ட சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி, தாய் அம்பிகா ஆகியோருக்கு புத்தகத்தை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கலிங்கம்(28) என்பவர் கைதாகி சிறையில் உள்ளார். இவர் பல வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலில் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சொக்கலிங்கம் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் போதை பொருட்கள் குறித்து பல்வேறு கட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.06) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் ‘போதை உனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம், போதையில்லா தமிழகம் படைப்போம்’ என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.06) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், அவசர தேவைக்காக ஆன்லைனில் லோன் வாங்கி ஆபத்தில் சிக்க வேண்டாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெருங்குடியில் செயல்படும் தனியார் கல்குவாரி 5 ஆண்டுகளில் எடுக்க வேண்டிய கனிம வளத்தை ஒன்றரை ஆண்டுகளில் எடுத்து முடித்து விட்டதால், அறப்போர் இயக்க புகாரின் பேரில் அந்த குவாரி செயல்பட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(டிச.06) தடை விதித்துள்ளார். ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை கனிம வளத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது கூடங்குளம் அணு உலையில் பயன்பாட்டு எரிபொருளை பாதுகாப்பாக வெளியேற்ற எத்தகைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன என கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். கழிவுகள் மீண்டும் எடுக்கப்பட்டு அணு உலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையின் போது எந்தவித கதிர்வீச்சு கசிவோ அணுக்கழிவு கசிவோ துளியும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.