Tirunelveli

News December 10, 2024

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பாளை பெருமாள் புரத்தைச்சேர்ந்தவர் ஓவலெஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று(டிச.9) மாலை பள்ளி முடிந்து திரும்பிய அவர் அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்தை சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News December 10, 2024

திருநெல்வேலியில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

#காலை 10 மணிக்கு மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிந்துபூந்துறையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.#காலை 11 மணிக்கு மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.#மாலை 5 மணிக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பாளையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

News December 10, 2024

நெல்லையில் நாளை ஈ.எஸ்.ஐ குறைதீர் முகாம்

image

ஈ.எஸ்.ஐ. துணை இயக்குநர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நெல்லை துணை மண்டலம் சார்பில் ஈ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைதீர் முகாம் நாளை(டிச.,11) மாலை 4 மணிக்கு ஈ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர்கள், துணை மண்டல பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 9, 2024

நெல்லையில் 15 நாள் தடை உத்தரவு 

image

சென்னையில் சமீப காலமாக பிரிவு 41-ன் கீழ் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸார் தடைவிதித்து வருகின்றனர். அவை தற்போது நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் டிச.9 முதல் டிச.23 வரை பொது இடங்களில் அனுமதியின்றி கூடுதல், கூட்டம் நடத்துதல், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

கடவுச்சொல்லை கடினமாக உருவாக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் கடவுச்சொல் எளிதாக உருவாக்குவதின் மூலம் இணையதளங்களில் மோசடிகள் எளிதாக நடக்கின்றன. இதனால் வலுவான கடவுச்சொல் எப்பொழுதும் பெரிய சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு எழுத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

News December 9, 2024

வாட்ஸ் அப் லிங்க் மோசடி: போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர். இந்த வரிசையில் வாட்ஸ் அப் லிங்கில் சென்று பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு பல மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வருகிறது. ஏமாற்றப்பட்டவுடனேயே தெரிந்து கொண்டு சைபர் கிரைம் போலீசின் உதவியை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மட்டுமே பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது என சைபர் போலீசார் தெரிவித்தனர்.

News December 9, 2024

ஷாலிமார் வாராந்திர ரயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

image

நெல்லை – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அடுத்த மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி நெல்லை – சாலிமர் ரயில் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 23ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது .மறு மார்க்கமாக ஷாலிமார் – நெல்லை ரயில் வரும் 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே நேற்று(டிச.08) உத்தரவிட்டுள்ளது.

News December 8, 2024

இரவு ரோந்து காவல்அதிகாரிகள் விபரம் வெளியீடு 

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு காவல் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைப்பேசி எண்ணும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு காவல் பணி சேவை பெறும் நபர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News December 8, 2024

நெல்லையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் டிச.14 அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.8 முதல் டிச.12 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

News December 8, 2024

நெல்லையில் பொருநை புத்தக திருவிழா 

image

நெல்லையில் ஆண்டுதோறும் பொருநை புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 2025 புத்தக திருவிழா பிரமாண்டமாக நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதோடு சேர்த்து இளைஞர் இலக்கிய திருவிழா & கலை திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் நூல் வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. எழுத்தாளர்கள் நூல் பிரதிகளை டிச.31க்குள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

error: Content is protected !!