Tirunelveli

News December 12, 2024

நெல்லையில் வெள்ள அபாயம் இல்லை – ஆட்சியர் 

image

கனமழை எதிரொலியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைவாகவே உள்ளதாலும், சுமார் 60% குளங்களில் பாதிக்கும் குறைவான நீர் இருப்பு மட்டுமே உள்ளதாலும் உடனடியாக எந்த வெள்ள அபாயமும் இல்லை. வானிலை மையம் கனமழை இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

News December 12, 2024

சிறுமியை பாலியல் சீண்டல் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

image

விஜயாபதி அடுத்த காடுதலா கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவர் 2019 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். வள்ளியூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு வள்ளியூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றவாளி வீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000  அபாரம் விதித்து நீதிபதி சுபத்ராதேவி தீர்ப்பளித்தார்.

News December 12, 2024

நெல்லையில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பகலில் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மழை தொடர்பான அவசர சேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மையம், மின் சேவை, தீயணைப்பு, காவல்துறை எண்களை கைவசம் வைத்துக்கொண்டு தேவைப்படுபவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்.

News December 12, 2024

நெல்லையில் டிச.20ல் வேலை வாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மரிய ஆண்டனி நேற்று(டிச.11) வெளியிட்ட செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர் வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

image

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி இன்று முதல் தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

News December 12, 2024

மீனவர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் -அப்பாவு

image

ராதாபுரம் பகுதியை சார்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடித்து செய்தபோது பக்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமான கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்று கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென முதல்வரிடம் அப்பாவு நேற்று வலியுறுத்தியுள்ளார்.

News December 12, 2024

நெல்லை மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு

image

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News December 12, 2024

நெல்லை மாவட்டத்தின் மழை நிலவரம்

image

நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று(டிச.12) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் திருநெல்வேலி மாநகரில் 6 மில்லி மீட்டர் மழை, பாளையங்கோட்டையில் ஐந்து மில்லி மீட்டர் மழை, சேரன்மகாதேவியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

News December 12, 2024

நெல்லை மாணவிக்கு இரண்டு உலக சாதனைகள்

image

நெல்லை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரது ஒன்பது வயது மகள் வர்ஷினி கடந்த மாதம் 1,330 திருக்குறளில் திருவள்ளுவரின் உருவத்தை 33 அடி உயர கதர் துணியில் வரைந்து அசத்தினார். இந்நிலையில் மாணவியின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் தற்போது அவருக்கு டிசிபி வேல்டு ரெக்கார்ட் மற்றும் ஜாக்கி புக் ஆங் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு உலக சாதனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே மாணவியை பலரும் பாராட்டுகின்றனர்.

News December 12, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள் விபரம்: பிற்பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பாளை மைய நூலகத்தில் பாரதியார் மாதாந்திர இலக்கிய புத்தக வெளியீட்டு விழா சிஇஓ தலைமையில் நடைபெறுகிறது. இன்று(டிச.12) மாலை 6.30 மணிக்கு மேல் நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

error: Content is protected !!