Tirunelveli

News January 6, 2025

பொங்கல் சிறப்பு பஸ்: நெல்லையில் முன்பதிவு ஆர்வம்

image

பொங்கல் பண்டிகைக்காக நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 10ம் தேதி முதல் 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நடைபெறுகிறது. ஏராளமான பயணிகள் இப்போதே போட்டி போட்டு தாங்கள் செல்லும் ஊர்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.

News January 6, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

காலை 10.30 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை முன் காலை 10:30 மணிக்கு தேமுதிக சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை மூன்றாம் நாள் நிகழ்ச்சி இரவு 6 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

News January 6, 2025

நெல்லை: பாதயாத்திரை சென்ற சிறுவன் கார் மோதி பலி!

image

தென்காசி மாவட்டம் கடையம் காமராஜ் நகரை சேர்ந்த சிறுவனான கலைச்செல்வம் அப்பகுதியை சேர்ந்தவர்களோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டார். இந்த குழு நேற்று முன்தினம் நெல்லை அபிஷேகபட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது இவர்கள் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காயமடைந்த 3 பேரையும் உடன் வந்தவர்கள் மீட்டு பாளை GH-க்கு அனுப்பி வைத்தனர். இதில் கலைச்செல்வன் நேற்று(ஜன.5) இறந்தார்.

News January 5, 2025

நெல்லை அருகே விபத்து; இருவர் மரணம் 

image

கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலம் பகுதியில் நேற்று இரவு சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பிய கார் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், சண்முகராஜா என தகவல்.2 குழந்தை உட்பட சிலர் காயங்களுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 5, 2025

தாமிரபரணி குறித்து கலெக்டர் உருக்கமான வேண்டுகோள்!

image

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நேற்று(ஜனவரி 4) நடைபெற்ற நீர்வள மேலாண்மை திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அப்போது, தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது. ஊர் இழுத்தால்தான் தேர் நிலைக்கு வரும். தனி ஒருவரால் தேர் இழுக்க முடியாது. அதுபோன்றுதான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் கடமையாற்றி வந்தால் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

News January 5, 2025

சாய்ந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்கிடுக: இசக்கி சுப்பையா

image

அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அரிகேசநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் வாழைகள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் நலன் கருதி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 5, 2025

நெல்லை: 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த தொழில்நுட்பம்!

image

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில், ஆற்று வெள்ளத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., முதுகலை தொல்லியல் 2ம் ஆண்டு மாணவிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அதில், அந்த காலத்திலேயே அதாவது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தை தாங்கும் அளவிலான தொழில்நுட்பத்துடன் கோவில் கட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

News January 5, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

நெல்லையப்பர் கோயிலில் இன்று(ஜனவரி 5) காலை 8:30 மணிக்கு மகா ம்ருத்யுஞ் மந்திர ஜெப வேள்வி நடக்கிறது. #தாழையூர்த்து அமேகா அரங்கில் மூட்டா 2ஆம் நாள் மாநாடு காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. #மார்கழி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு நவ கைலாய கோயில்களுக்கு காலை முதல் சிறப்பு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

News January 5, 2025

நெல்லை அரசு விதை பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு

image

சென்னை வேளாண் இயக்குநர் பா.முருகேஷ் நேற்று(ஜன.4) திருநெல்வேலி மாவட்ட அரசு விதை பண்ணை கரையிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். கரையிருப்பு மாநில அரசு விதை பண்ணையில், நெல் ரகங்களில் வல்லுநர் விதையிலிருந்து ஆதார விதைப்பண்ணை அமைத்து மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதார விதை வழங்கப்பட்டு வருகிறது. விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களின் மகசூல் உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்கினார்.

News January 5, 2025

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்! இன்று ஆரம்பம்

image

பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜன.12,19,26 தேதிகளில் நெல்லையிலிருந்து பகல் 3.30 மணிக்கும், ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பகல் 3.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படுகிறது. நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இன்று(ஜன.5) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

error: Content is protected !!