Tiruchirappalli

News October 24, 2024

எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை

image

திருச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவருமான செல்வ பெருந்தகை அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்தியா கூட்டணி பற்றி பேச எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடத்தை விட்டு விட்டு பாடியவர்கள் தான் சீமான் விமர்சிக்க வேண்டும் ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை விமர்சிக்கிறார் என்று கூறினார். COMMENTIT

News October 24, 2024

ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கோரிக்கை வைத்துள்ளார்.

News October 24, 2024

எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவியால் பரபரப்பு

image

சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News October 23, 2024

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி-யிடம் மனு

image

மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் இன்று திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

News October 23, 2024

ஒலிம்பிக் பயிற்சி அகாடமிக்கு டெண்டர் பணிகள் தீவிரம்

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட மேம்பாட்டிற்காக 50 கோடி ரூபாய் செலவில் 47 ஏக்கர் நிலத்தில் பணிகள் அனைத்தும் தொடங்க நிலம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

News October 23, 2024

திருச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 23, 2024

நம்ம மலைக்கோட்டைக்கு ஒரு பில்லியன் வயது

image

திருச்சியின் முக்கிய அடையாளமாக திகழ்வது மலைக்கோட்டை. திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழும் மலைக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் (100 கோடி) ஆண்டுகளுக்கு பழமையானது. மேலும் கீழே மாணிக்க விநாயகர், மேலே உச்சிப்பிள்ளையார், இடையே தாயுமானவர் என 3 சாமிகள் அமைந்துள்ளன. ஷேர் செய்யவும்

News October 23, 2024

டானா புயல் காரணமாக ரயில்கள் ரத்து

image

டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி புருலியா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 23ஆம் தேதியும், ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயில், கோரக்பூர்-விழுப்புரம் அதிவிரைவு ரயில் வரும் 24ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

News October 23, 2024

திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

image

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News October 23, 2024

கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அழைப்பு

image

கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு “தீவன அபிவிருத்தி” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதில் 2 கால்நடைகள் வைத்து நீர்பாசன வசதியுடன் நிலத்தில் 0.25 ஏக்கர் குறையாமல் தீவன பயிர்களை, பயிரிட்டு பராமரிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

error: Content is protected !!