India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேர்வு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் அவர் பார்வையிட்டார்…
திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்ட போது, ரூ.97ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர்.
தேசிய சைபா் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இணைந்து நடத்தும் தேசிய சைபா் பாதுகாப்பு மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து திருச்சி சரக டிஐஜி எம். மனோகரன் பேசியதாவது விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே இணைய வழிக் குற்றங்களை தடுக்க முடியும் என்றார்.
திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து இதில் கொள்ளலாம் என சிஇஓ தெரிவித்துள்ளார்.
திருச்சி லால்குடியை சேர்ந்தவர்கள் முத்தையன், கோபி. இருவரும் அண்ணன் தம்பிகள். வேலைக்கு சென்ற இடத்தில் தம்பி கோபியை நோயாளியான முத்தையன் கொலை செய்தார். இந்த வழக்கில் முத்தையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொலை வழக்கில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாசுக் கட்டுபாடு வாரியம் ஒவ்வொரு வருடமும் காற்று மாசு குறித்து நகரங்களின் பட்டியலை வெளியிடும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான காற்று மாசு குறித்து நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசு குறைவான நகரங்களின் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடம் பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ளது.
திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் கிராப்பட்டியை சேர்ந்த யாகுல மேரி என்ற மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவரது காதுகளில் இருந்த தோடுகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன. மேலும் அவரது தலையிலும் ரத்த காயங்கள் இருந்தன. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் 234 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 18 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
புறத்தாக்குடி அடுத்த மகிழம்பாடியைச் சேர்ந்த ஹென்றி ராஜ், தச்சன்குறிச்சி VAO-வாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பாத்ரூம் செல்லும் போது வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் அடிபட்டது. பின்னர் சிகிச்சைக்காக சென்ற போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகமது அப்பாஸ் அம்பேத்கர் நகர் மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.