India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தங்களது குறைபாடுகளை குறிப்பிட்டு வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் ஹின்டன் பர்க் அறிக்கையால் அதானி மீது மோசடியில் ஈடுபடுதல் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மீண்டும் முன் வைத்திருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதனால் தான் ராகுல் காந்தி பலமுறை அதானிக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். அதன் அர்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
கருமண்டபத்தை சேர்ந்த சோலை பாண்டியன் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா, மகன் சுரேஷ்குமார். இவர்கள் 3 பேரும் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிஅளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே, எழுந்து பார்த்தபோது அவரது அறையில் நாட்டுவெடிகுண்டு வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. உடனே, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.
துறையூரில் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையூர் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் துறையூர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக தமிழ்நாட்டிலேயே திருச்சிராப்பள்ளி உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக 20 ஏ.கே.யூ.ஐ. பாயிண்டில் திருச்சிராப்பள்ளி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சுற்றிலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களும் அதிகமாக உள்ளனர். விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதுவே தூய்மையான காற்றுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இது அரசு பணி அல்ல. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (https://dsdcpimms.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில், செவலூர் பிரிவு சாலை அருகே கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்தோணி ராஜ் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதியதில் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்ப முயன்ற அந்தோணிராஜ் மற்றும் அவரது வாகனத்தை கைப்பற்றி மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம், பூவாளூர், காட்டுப்புத்தூர், துவாக்குடி, கொளக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் பாலசமுத்திரம், கொளக்குடி, எம்.புத்தூர், நத்தம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி காஜாமலை மற்றும் பூலாங்குடி பகுதிகளில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதயம் மளிகை மற்றும் KJN டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் மொய்தீன், இவர் துபாய் செல்வதற்காகவும், தஞ்சாவூரை சேர்ந்த வெள்ளையம்மாள் இவர் சிங்கப்பூர் செல்வதற்காகவும் சிவகங்கையை சேர்ந்த திருநாவுக்கரசு, ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது மொய்தீன் ஆகியோர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்கள் போலி ஆவணம் கொடுத்து பயணம் செய்தது தெரியவந்தது. ஏர்போர்ட் போலீசார் நால்வரையும் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.