India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்றார். சாலப்பட்டியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் உங்கள் பிள்ளைகளை உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். வேலைக்கு அனுப்பக்கூடாது அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க உயர் கல்வி பயில அனுப்ப வேண்டும் என்றார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு சமூகவியல், பொதுநலம், ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தென்னை பயிர் இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் பலன் கொடுக்காத விவசாயிகள் தென்னை மரப் பயிருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு மற்றும் முறை பற்றி தோட்டக்கலை அலுவலகத்தில் தகவல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
திருச்சியில் 2024-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.2063 தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் படித்துறையில் கடந்த அக்.30-ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி ஜீயபுரத்தில் இன்று (நவ.22) மீண்டும் ஒருமுறை ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீன்பிடிக்க வலையை வீசிய போது அதில் மீன்களுக்கு பதிலாக ராக்கெட் சிக்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். பொது மக்களின் தரத்தினை மேம்படுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், அதில் தங்களது சுய விவரம், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரன் (34). இவர் மனைவி (சுலோச்சனா) மற்றும் தாயாரிடம் (காமாட்சி) மதுபோதையில் தினந்தோறும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரனின் தாய், மனைவி ஆகியோர் 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் உதவியுடன் குணசேகரனின் கழுத்தை நெரித்தும், உடலில் காலி ஊசியை செலுத்தியும் கொலை செய்துள்ளனர். இதையறிந்த கோட்டை போலீசார் கொலையாளிகள் 5 பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.