India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகையை சிரமம் இன்றி மக்கள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் முன்னதாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இப்பயிற்சி பெற பட்டபடிப்பில் தேர்ச்சி, 21 முதல் 32 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஷேர் செய்யவும்
லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் சமூக வலைதளத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் யாரும் என்னுடன் பேசக்கூடாது என சொல்லி வந்த முதன்மையான மூத்தவர், தற்போது வெளி மாவட்ட செயலாளர்களிடம் என்னிடம் பேசுகிறீர்களா என விசாரிக்கிறார். நாங்கள் என்ன கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் இடமா பேசுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவர் பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது கேண்டின் மூடப்பட்டதால், சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்,மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் இன்று NO.1டோல்கேட் உத்தமர் கோவில் அருகே வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:இடைத்தேர்தல் வந்தால் கணக்கு பார்க்காமல் கொடுக்கும் கட்சி.பொங்கலுக்கு ரூபாய் 5000 கொடுத்தால் என்ன.மழை பாதிப்பில் சென்னை, திருவண்ணாமலை,புதுச்சேரி மக்களுக்கு ஒரு சிலருக்கு தான் நிவாரணம் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒத்த கருத்து என்பது தேர்தலில் மட்டும் ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்றார்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 424 கிராம் தங்கம் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து பயணி இடம் விசாரித்து வருகின்றனர்…
திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு காரணமாக நடக்க உள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மணிமண்டபசாலை, காந்தி மார்க்கெட், சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, ஆண்டார் வீதி, மலைக்கோட்டை , பாபு ரோடு, லட்சுமிபுரம், உக்கடை, கல்மந்தை, ராணி தெரு, கிருஷ்ணாபுரம், பூலோகநாதர் கோயில் தெரு, இது போன்ற இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சியிலுள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் ஜன.21 அன்று, ஒரு நாள் வயதுடைய கோழி குஞ்சுகள் விற்பனைக்கு வரவுள்ளன. கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் இன்று முதல் திருச்சி கோழி பண்ணை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் உரிய விலையை செலுத்தி முன்பதிவு செய்து கோழி குஞ்சுகளை பெறலாமென தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Way2News Appஇல் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.