Tiruchirappalli

News December 3, 2024

தென்னூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா. இவர் நேற்று சின்னசாமி நகர் பகுதியில் வீட்டில் ஷெட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு குழாய் மின்வயரில் பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News December 2, 2024

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து பலி

image

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி இருந்தது. இந்நிலையில் அவர் ஆட்டோவில் ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாரிமுத்துவை அரசு மருத்துவமனையில் சேர்த்ததில், அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாரிமுத்து இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 2, 2024

டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அமைச்சர்

image

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், திமுக கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு இன்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார். இந்த நிகழ்வில் திருச்சி எம்பி சிவா, தூத்துக்குடி எம்பி கனிமொழி, பெரம்பலூர் எம்பி அருண் நேரு மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்கள் உடன் கலந்து கொண்டனர்.

News December 2, 2024

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் கொள்ளை

image

திருச்சி குண்டூர் அருகே அய்யம்பட்டி பெத்லகேம் நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (63). இவர் கடந்த நவ.17ஆம் தேதி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் 5,000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

News December 1, 2024

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு வன விலங்குகள் பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் வெளிநாட்டு வன உயிரினங்கள் வகையிலான 55 பல்லி மற்றும் ஓனான் வகைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்தது எப்படி என அந்நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News December 1, 2024

சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலைக்கு செல்ல தடை

image

துறையூர் அடுத்த பச்சைமலை மங்கலம் அருவியில் மழை வெள்ளம் அதிகரித்திருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலையின் அடிவார பகுதியான புளியஞ்சோலை அருவி மற்றும் நீரோடைகளில் வெள்ள நீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், செல்பி எடுக்கவும், குளிப்பதற்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 1, 2024

திருச்சி மாவட்டத்தில் 11.73 மிமீட்டர் மழை பதிவு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருச்சியில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. அதன்படி மலைக்கோட்டை 10.2 மிமீ, விமான நிலையம் 12.3 மிமீ, திருச்சி மத்திய பேருந்து நிலையம் 14.6 மிமீ, திருச்சி டவுன் 10 மிமீ என திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 281.4 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.73மிமீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 1, 2024

திருச்சி மாவட்டத்தில் 11.73 மிமீட்டர் மழை பதிவு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருச்சியில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. அதன்படி மலைக்கோட்டை 10.2 மிமீ, விமான நிலையம் 12.3 மிமீ, திருச்சி மத்திய பேருந்து நிலையம் 14.6 மிமீ, திருச்சி டவுன் 10 மிமீ என திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 281.4 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.73மிமீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 1, 2024

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

image

சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி பகுதியில் வசிக்கும் மதிவாணன் என்பவர் கூலி வேலைசெய்து வருகிறார். கடந்த மாதம் எட்டாம் தேதி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேநீர் கடைக்கு விளம்பரம் போர்டு கட்டும்போது, கடைக்கு மேல் சென்ற உயர் மின் கம்பியில் விளம்பரப் பலகை பட்டதில் மின்சாரம் தாக்கி மதிவாணனை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்த மதிவாணன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

News December 1, 2024

தொட்டியத்தில் 44 பவுன் மீட்பு

image

தொட்டியம் பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலணியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகனூர் வாளவந்தியைச் சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அவர்களிடமிருந்து 44 பவுன் சவரன் நகைகளைதொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் காட்டுப்புத்தூர் போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!