India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப் படையினரால் நடத்தப்பட உள்ள அக்னிவீரவாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஜன.7 முதல் ஜன.27 வரை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம். 22.03.2025 முதல் இத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்த நாச்சரம்மாள் என்ற மூதாட்டி அப்பகுதியில் உள்ள பாறைக்கு இன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை போலீசார் மூதாட்டி இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் ஆணைக்கேற்ப, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட அதிக முக்கியத்துவம் தரப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். SHAREIT
கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மது குடித்தவாறு சென்று மதுபாட்டிலை சாலையில் வீசிச்சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தில் மது குடித்துவிட்டு செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மது குடித்தவாறு சென்று மதுபாட்டிலை சாலையில் வீசிச்சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தில் மது குடித்துவிட்டு செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருச்சி ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 11ஆம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையில் காவல்துறை தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆய்வாளர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. கடக்க முயன்ற போது ஏதாவது ஒரு ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசித்தி பெட்ரா சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று நடிகர் சிவகார்த்திகேயன் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு விநாயகர், உற்சகாம்பாள், கொடிமரம் வணங்கினார். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சைமணி, சேது லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் சுதாகர் உடனிருந்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் பார்ப்பதற்கு கோவில் வட்டாரங்களில் கூட்டம் கூடியது.
திருச்சி அங்காடி பகுதிகளான மணச்சநல்லூர், லால்குடி, திருச்சி, புள்ளம்பாடி, துவரங்குறிச்சி, துறையூர், மணப்பாறை, தொட்டியம் தா.பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் “கண்வலி கிழங்கு” விதை விற்பனையை முறைப்படுத்தி அரசாணை வெளியாகி உள்ளது. எனவே இந்த விதை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள விற்பனை கூடங்களை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT
Sorry, no posts matched your criteria.