Tiruchirappalli

News December 13, 2024

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

image

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருச்சி, கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவவாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News December 13, 2024

கைவினை கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு அரசு”கலைஞர் கைவினை திட்டம்”என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,கட்டிட வேலைகள்,நகை செய்தல்,பூட்டு தயாரித்தல் சிற்ப வேலைபாடுகள், பொம்மைகள் தயாரித்தல், கண்ணாடி வேலைபாடுகள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.இந்த திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள கலைஞர்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்

News December 13, 2024

திருச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 12, 2024

ஔவையார் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

2025ம் ஆண்டிற்கான பெண்களுக்கு சேவை புரிந்த மகளிர்க்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதிகளாக 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்,5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூகசீர்திருத்தம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருக்க வேண்டும்.w ww.award.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யாலம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News December 12, 2024

விவசாயிகளுக்கு திருச்சி ஆட்சியர் அறிவுரை

image

திருச்சியில் 3000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இது பல்வகை பூஞ்சைகள் மூலம் தோன்றுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்து விட வேண்டும் என்றும், பயிர் சுழற்சி முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

News December 12, 2024

திருச்சி: பருவமழை உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பில் சிக்கி இருந்தால் புகார் தெரிவிக்க 0431 2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.மேலும் 9384056213 என்ற whatsapp எண்ணிலும் புகார் அளிக்கலாம்.பிறகு,வட்ட அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என்றார்.

News December 12, 2024

முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரள் அணி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

News December 12, 2024

விளையாட்டு பயிற்றுநர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை பயிற்றுவிக்கும் தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் யாரேனும் இருந்தால்,திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டார்.மேலும், விண்ணப்பம் செய்ய கடைசி நாள்:29.12.24 என்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2024

திருச்சியில் விடுமுறையா? ஆட்சியர் தகவல்

image

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால் சென்னை உள்பட 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், “திருச்சிக்கு விடுமுறை இல்லை” என திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். அரையாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அறிவிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் விடுமுறை கோரி சமூக ஊடங்களில் அனல் பறக்கிறது.

News December 12, 2024

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரம் சாற்றுதல் உற்சவம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியான நேற்று கைசிக ஏகாதசியை முன்னிட்டு, அர்ஜுன மண்டபத்தில் ஶ்ரீநம்பெருமாளுக்கு 365 வஸ்திரம் சாற்றுதல் சேவை நடந்தது. நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது.

error: Content is protected !!