Tiruchirappalli

News December 27, 2024

தானியங்கி பம்ப்செட் கருவி: ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இக்கருவியை கொண்டு கிணறுகளில் உள்ள பம்ப் செட்களை வீட்டிலிருந்தும், வெளியூர்களில் இருந்தும் இயக்கவும், நிறுத்தவும் முடியும். விருப்பமுள்ள விவசாயிகள் திருச்சி, முசிறி, லால்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

திருச்சியில் டைடல் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம்

image

திருச்சியில் 415 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி இன்று டைடல் பூங்கா விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 26, 2024

திருச்சியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் 

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்கள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04312413510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவருக்கு சிறை

image

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமான மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அண்ணாமலை என்ற நபர் வருகை தந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வந்த பாஸ்போர்ட் தவறான தகவலின் அடிப்படையில் பெறப்பட்ட போலியானவை என தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 26, 2024

திருச்சியில் விரைவில் அமைய இருக்கும் டைடல் பார்க்

image

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் திருச்சியில் சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவில், 93,000 சதுரடியில், ரூ.415 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் நிறுவனமானது விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் 6,000 பேருக்கு ஐ.டி வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 25, 2024

5 பவுன் தங்க நகையை அபேஸ் செய்த கடை ஊழியர்கள்

image

திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சுகன்யா, கார்த்திக், அனார்கலி ஆகிய 3 பேர் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று 5 பவுன் தங்க நகைகளை இந்த 3 பேரும் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர். இதனை கண்டுபிடித்த மேலாளர் பிரசன்னகுமார், இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2024

விமான நிலையத்தில் 8,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பறிமுதல்

image

உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று கொழும்பு செல்லவிருந்த பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் 4.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8,000 ஆஸ்திரேலிய டாலர் வெளிநாட்டு பணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 25, 2024

தொட்டியம் அருகே கடன் தொல்லையால் தற்கொலை

image

தொட்டியம் கணேசபுரத்தில் நேற்று தங்கவேல் என்பவர் தான் வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் நேற்று வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

News December 25, 2024

திருச்சி: மூன்றாவது மாணவனின் உடலும் மீட்பு

image

திருச்சி காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மூழ்கிய பள்ளி மாணவர்களில் 3 பேரில் ஒரு மாணவரின் உடல் காலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாலை 4 மணி அளவில் சிம்பு என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது. மூன்றாவது நபரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக விக்னேஷ் என்பவரின் உடலும் மீட்கப்பட்டது. இது திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News December 25, 2024

திருச்சியில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இதில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சி அளிப்பதுடன், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!